“ஆளுநரின் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது” - திருமாவளவன் திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "வழக்கம்போல மேதகு ஆளுநர் அவர்கள் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் வழக்கம்போல அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது விசிகவும் புறக்கணித்திருப்பதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications