Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஒன்றும் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கும் சீமான்..' ஆணவ கொலை குறித்த சீமான் பேச்சை விளாசும் வன்னி அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் நடைபெறும் ஆணவப் படுகொலைகள் ஏன் நடக்கிறது என்பது குறித்து எதுவும் தெரியாமல் சீமான் உளறிக் கொண்டிருப்பதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சாடியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருப்பது ஜெய் பீம் சர்ச்சை தான். ஒருபுறம் படம் பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வரும் நிலையில், சர்ச்சைகளும் தொடர்ந்து அணி வகுத்து நிற்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதிலை விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.

 ஜெய் பீம் சர்ச்சை

ஜெய் பீம் சர்ச்சை

தீபாவளி சமயத்தில் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வெளியான போதே நடிப்பு, கதைக் கரு, படம் எடுக்கப்பட்ட விதம் ஆகியவற்றுக்காகப் பலரும் புகழ்ந்தனர். படம் வெளியானது முதலே ஜெய் பீம் திரைப்படம் பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தது. அவை கடந்த சில நாட்களாகப் பூதாகரமாகியுள்ளது

 சீமான் பர்ஸ் மீட்

சீமான் பர்ஸ் மீட்

இதனிடையே இது குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதிலை விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில் வன்னியச் சங்க தலைவராக இருந்த ஜெ. குரு வன்னியச் சங்க மாநாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசியது தொடர்பாகச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குச் சீமான் நேரடியாகப் பதில் அளிக்காமல் வேறு எதோ சொல்கிறார்.

 அவர் அப்படி தான் பேசுவார்

அவர் அப்படி தான் பேசுவார்

செய்தியாளர் மீண்டும் அந்த கேள்வியைக் கேட்கவே, "அவர் ஒரு சாதி சங்க தலைவர். அவர் அப்படி தான் பேசுவார். அதில் என்ன குறை உள்ளது, கன்னியாகுமரியில் ஜெ. குரு பேசுவதாலா ஆணவ கொலை நடக்கிறது" என்று பதிலுக்குக் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாகச் சீமானை வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.

 உளறும் சீமான்

உளறும் சீமான்

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது தான் #இந்துத்துவக்கட்டமைப்பு. சாதி மீறி திருமணம் செய்தால் படுகொலை செய்கிறது மநுவாதம். அதன் பெயரே #ஆணவப்படுகொலை.இந்த இந்துத்துவக்கருத்தியலே இந்தியா முழுக்க படுகொலை செய்யத்தூண்டுகிறது. இதுகூட தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார்" என்று சீமானை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    Anbumani சமூகத்தின் வலியை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது வலியும் நியாயமானது - Seeman
    கோவிந்தன்

    கோவிந்தன்

    முன்னதாக உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதிக்குக் கடைசி வரை உறுதுணையாக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன். இருப்பினும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தனை அந்த படத்தில் வன்னியராக அடையாளம் காட்டப்படவில்லை என திடீரென சர்ச்சை கிளம்பியது. அதற்கு அவர், "நான் கம்யூனிஸ்ட். என்னை வன்னியர் என்றோ, படையாட்சி என்றோ சொல்லிச் சாதி அரசியலுக்குள் சுருக்காதீர்! " என பளீச் பதிலடி கொடுத்திருந்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+