நான் ஏன் இறங்கி வரனும்.. முரண்டு பிடிக்குதே முருங்கைக் காய்! விலையைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க மக்களே!
சென்னை: தமிழகத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 100 ரூபாய்க்கும், பீன்ஸ் 95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதிகபட்சமாக முருங்கைக்காய் 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த பல வாரங்களாகவே முருங்கைக்காய் விலை உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது மழையோடு, கடுமையான பனிப் பொழிவுடன் காணப்படுகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பனி மற்றும் மழைக் காலங்களில் ஈரப்பதம் காரணமாக வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும். மேலும், சபரிமலை ஐயப்பன் சீசன் முடிந்து, தைப்பூசம் சீசன் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் பாதயார்த்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் இந்த காலங்களில் இறைச்சி விலை வெகுவாக குறையும் அதே நேரத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 260 முதல் 250 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் தற்போது 220 ரூபாயாக குறைந்து இருக்கிறது. ஆட்டு இறைச்சி விலை 800 ரூபாயாகவும், மீன்களின் விலை 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பீன்ஸ் ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது வரத்து குறைவோடு. பனிப் பொழிவு மற்றும் பக்தர்கள் விரதம் கடைபிடிக்கும் காலம் என்பதால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக பீன்ஸ், கத்தரிக்காய், கேரட், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.
இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் 95 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பீட்ரூட் 80 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல முட்டைக்கோஸ் 60 ரூபாய்க்கும், கேரட் ₹80க்கும், பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கும், இஞ்சி 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தக்காளி விலை மட்டும் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் 32 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உருளைக்கிழங்கு 70 ரூபாய்க்கும், பூண்டு 380க்கும் விற்பனையாகிறது. அதிகபட்சமாக சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த பல வாரங்களாகவே உச்சத்தில் இருக்கும் முருங்கை விலை அதே நிலையில் தொடர்கிறது. அதிகபட்சமாக முருங்கைக்காய் ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இந்த விலைகள் அனைத்தும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை விலை மட்டுமே. இங்கு மொத்தமாக காய்கறிகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விற்பனை விலையில் கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை ₹100 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications