புதுச்சேரிக்குள் நுழைய தடை.. இசிஆர் ரோட்டில் போலீசார் கெடுபிடி.. திணறும் வாகன ஓட்டிகள்!
சென்னை: கிழக்கு கடற்கரை சாலை வழியாக தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் தமிழகத்தில் இருந்து இசிஆர் சாலை வழியாக புதுச்சேரிக்குள் வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகின்றன.

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தீவிர புயல் நிவர் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் கடலுக்கு தென் கிழக்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.
தற்பொழுது இதன் காற்றின் வேகம் 105 கிலோ மீட்டர் முதல் 115 கிலோ மீட்டர் வரை உள்ளது என்றார்.
மேலும் திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என்றும் கூறினார்,.
காற்றின் வேகத்தை பொருத்தவரையில் புயல் கரையை கடக்கும் சமயத்தில் நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சமயத்தில் 170 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்ல புதுச்சேரியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இசிஆர் சாலை வழியாக புதுச்சேரிக்குள் வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகின்றன. புதுச்சேரிக்கு ஈசிஆர் சாலையை பயன்படுத்தாமல் திண்டிவனம் சாலையை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் கடல் அலைகள் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.கனமழை பெய்து வருவதால் கிழக்கு கடற்கரை சாலை அச்சமூட்டுகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications