தேர்தல் வந்தால் போதும்.. சின்ராசை கையில புடிக்க முடியாது.. 'கபடி' ஆடிய 'தெறி' வேட்பாளர்
சென்னை: தேர்தல் வந்துவிட்டால் குட்டிக்கரணம் அடிப்பது, கும்மாங்குத்து போடுவது போன்ற பல ஜிம்மிக்ஸ் வேலைகளை நாம் பார்க்க முடியும்.
Recommended Video
வாக்காளர்களை எப்படியாவது கவர வேண்டும், தங்கள் மீது அவர்கள் பார்வை விழ வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் கையிலெடுக்கும் ஸ்டிராடஜி இது. பெரிய தலைவர்களாக இருந்தால் பஸ்ஸில் மக்களோடு பயணிப்பது, ரோட்டில் நடந்து செல்வது, ரோட்டோர கடைகளில் டீ குடிப்பது, மாட்டு வண்டியில் போவது என்று அவர்கள் பாணி வேறுமாதிரி இருக்கும். அப்படியொரு சம்பவம் தான் இது.

சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ அசோக், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

சென்னை திருவான்மியூர் மீனவ குப்பத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அசோக், செல்லும் இடமெல்லாம் பெண்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அந்த சமயத்தில் திருவான்மியூர் பகுதியில் பள்ளி மாணவர்கள் கபடி விளையாடி கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் அசோக், சிறுவர்களுடன் இணைந்து வேட்டியை மடித்துக் கட்டி கபடி விளையாடினார்.

சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்களுடன் கபடி விளையாடியதை கூடியிருந்த மக்கள் கண்டு ரசித்தனர். அவர் கபடி விளையாடிய வீடியோவும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications