Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதம் மாறி திருமணம்: ராகுல் உடன் போவதாக சொன்ன கீர்த்தனா.. போலீஸ் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதம் மாறி திருமணம் செய்ததால் மணமகன் குடும்பத்தினரை வெட்டிய சம்பவத்தில் பெண்ணின் தந்தை, தாய் உள்பட உறவினர்கள் 9 பேரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகுல் உடன் செல்வதாக கீர்த்தனா தெரிவித்த நிலையில், அவரை போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூர் நாகவாரா பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரின் மகன் ராகுல், அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராவ் என்பவரின் மகள் கீர்த்தனா ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இவர்களின் காதலுக்கு, ராகுலின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், கீர்த்தனாவின் குடும்பத்தார் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

Velankanni crime religion

இந்நிலையில், மணமகன் பெற்றோர் சம்மதத்துடன் தங்கள் திருமணத்தை நடத்தி முடிக்கும் நோக்கில், இந்தக் காதல் ஜோடி பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்துள்ளது. காதலன் ராகுலுடன் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வேளாங்கண்ணிக்கு வந்தனர். வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ராகுலுக்கும் கீர்த்தனாவுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணம் முடிந்த பின்னர், மணமக்களும் ராகுலின் குடும்பத்தினரும் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். திருமணம் குறித்த தகவல் அறிந்த கீர்த்தணாவின் குடும்பத்தினர் சுமார் 15 பேர் கொண்ட கும்பல், உடனடியாக பெங்களூரில் இருந்து புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வந்தனர்.

அவர்கள், ராகுல் குடும்பத்தினர் தங்கியிருந்த தனியார் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து, கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். கையில் வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால், காதலன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சரமாரியாக வெட்டினர்.

பின்னர், கீர்த்தனாவை பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மணமகன் ராகுல், அவரது தந்தை டேனியல், சித்தப்பா பிரகாஷ், மற்றும் தாய் கலையரசி ஆகியோர் பலத்த வெட்டுக் காயங்களுக்கு ஆளாகி, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேளாங்கண்ணி போலீசார், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பெண்ணின் குடும்பத்தார் சென்ற காரை விரட்டிச் சென்றனர். சேஸ் செய்து, கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியில் வெங்கோராவ் (30) மற்றும் ராம்நாத் ராவ் (40) ஆகிய இருவரை கைது செய்தனர். மணப்பெண்ணுடன் பெங்களூர் தப்பிசெல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை, உறவினர்கள் உள்பட 9 பேரை வேளாங்கண்ணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, மதம் மாறி திருமணம் செய்த விவகாரத்தில், வேளாங்கண்ணியில் நடந்த கொலைவெறித் தாக்குதல் மற்றும் பெண் கடத்தல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பெண்ணின் தந்தை, தாய் உள்பட உறவினர்கள் 9 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 9 பேரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகுல் உடன் செல்வதாக கீர்த்தனா தெரிவித்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் அவரை வீட்டுக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+