மோச்சா புயல் மொக்க.. காட்டு காட்டுன்னு காட்டிய ஊமை 'வெயில்'.. இந்த ஊருக்குதான் அதிக பாதிப்பு.. உஷார்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவு வெயில் பதிவாகியுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு மோச்சா என பெயரிடப்பட்ட நிலையில் தற்போது இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று 8 கி.மீ வேகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அதாவது தென்னிந்தியாவை விட்டு வங்கதேசம், மியான்மரை நோக்கி டிராவல் செய்துக்கொண்டிருக்கிறது.

இன்றைய (மே 13) தேதியை பொறுத்த அளவில் பீகாரிலிருந்து சுமார் 565 கி.மீ தொலைவிலும், வங்கதேசத்திலிருந்து 760 கி.மீ தொலைவிலும், மியான்மரிலிருந்து 690 கி.மீ தொலைவிலும் இப்புயல் நிலைகொண்டிருக்கிறது. இந்நிலையில் இது நாளை (மே.14) மதியம் மியான்மரில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வடக்கு அந்தமான் பகுதியில் 65 கி.மீ வரை காற்று வீசும். தென்கிழக்கு வங்கக்கடலில் இதன் வேகம் 75 கி.மீ ஆக இருக்கும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களை போல தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் நற்செய்தி இருக்கிறதா? என்று கேட்டால் வழக்கம்போல இல்லை என்று கைவிரித்திருக்கிறது வானிலை ஆய்வு மைய்யம். தொடக்கத்தில் இந்த புயல் உருவாகும்போது வட தமிழகத்திற்கு கொஞ்சம் மழை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் தலைவர் 'மோச்சா' டாட்டா சொல்லிவிட்டு மியான்மர் போய்க்கொண்டிருப்பதால் தமிழ்நாடு பக்கம் இருந்த கொஞ்ச நஞ்ச மேகங்களும் கூடவே சென்றுவிட்டது என வானிலை மையம் கூறியுள்ளது.

பொதுவாக ஒரு இடத்தில் புயல் உருவாகிறது எனில் அந்த இடத்தை சுற்றியுள்ள மேகங்களை உறிஞ்சிக்கொண்டு புயல் வலிமையடையும். தற்போது மோச்சாவும் இதே வேலையைதான் பார்த்திருக்கிறது. இதில் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில் இந்த புயல் அதிதீவிர புயலாக உருப்பெற்றிருக்கிறது என்பதுதான். இதன் அர்த்தம் அடுத்த நான்கு நாட்களுக்கு இந்த பக்கம் மழை இல்லை என்பதுதான். ஏற்கனவே அக்னி வெயில் தொடங்காததற்கு முன்னரே தமிழ்நாட்டில் வெயில் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்தது.
இப்படி இருக்கையில் கொஞ்ச நஞ்ச மழை மேகங்களையும் மோச்சா தனதாக்கிக்கொண்டதால் இனி சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெயில் மட்டும்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெயில் எங்கு பதிவாகியுள்ளது என்பது குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெயிலுக்கு பெயர்போன வேலூரில் சுமார் 39.5 டிகிரி செல்ஷியஸ் வெயில் காட்டியுள்ளது. அதாவது 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அடித்திருக்கிறது. வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசியுள்ளதால் வேலூர் மக்கள் வாடி வதங்கிபோயுள்ளனர்.
குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 71.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் இன்று வழக்கமான வெப்பநிலையை விட மேலும் 1-2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications