வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் வேலையா.. ரயில்வே துறைக்கு வேல்முருகன் கடும் கண்டனம்
வேல்முருகன் இன்று சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தி உள்ளார்.
சென்னை: சட்டத்துக்கு புறம்பாக வட மாநிலத்தவரையே பணியில் அமர்த்த தொடர்ந்து முறைகேடாக செயல்படும் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே துறையில் முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாகவும், தென்மண்டல ரயில்வே துறையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரை மட்டுமே பயிற்சி பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பலமுறை கோரிக்கை விடுத்து அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் வேல்முருகன்.

குறிப்பாக தென்னக ரயில்வேயில் கொடிகட்டிப் பறக்கும் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இப்போது வடநாட்டவர்களையே திரும்பவும் பணியில் அமர்த்தி வருவதாக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மீது மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளார். இதற்காக இன்றைய தினம் சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளார்.
சென்னை ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை இன்று பகல் 12 மணியளவில் முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications