மத்திய அரசு நிதி கொடுக்காத போது... மாநிலங்களில் கொரோனா ஒழிப்பு சாத்தியமா..? -வேல்முருகன்
சென்னை: மத்திய அரசு போதிய நிதி கொடுக்காத போது, மாநிலங்களில் கொரோனா ஒழிப்பு சாத்தியமா என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான நிதியை கூட பெறமுடியாமல் அதை பெறுவதற்கு போராட வேண்டியுள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கண்ணும் கருத்தும்
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக இது 4ஆவது பொது முடக்கம் (ஊரடங்கு). இதில் ஒவ்வொரு ஊரடங்கின்போதும் கொரோனா பெருகியபடி உள்ளது என்பதுதான் உண்மை நிலை. இதனால் அறிவியலாளர்கள், சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும், அவர்களிடம் ஒருவித திகைப்பும் இல்லாமலில்லை.

நிதி முக்கியம்
அந்தத் திகைப்புக்குக் காரணம், "ஊரடங்கு, சமூக விலகல், தனித்திருத்தல், முகக்கவசம் அணிதல், பரிசோதனைகள் எனக் கறாராக இருந்தும், கொரோனா தொற்று குறையாமல் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான்." இது ஒருபுறமிருந்தாலும், மிக முக்கியம் நிதிதான். இதில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை, நிதிப்பாக்கியைக் கூட கொடுத்தபாடில்லை.

42 விழுக்காடு
ஒன்றிய அரசுக்கான நிதி என்பது, மாநிலங்களின் வரி வருவாய் அனைத்தும் ஒன்றிய அரசுக்குச் செல்வதுதான். அதிலிருந்துதான் 42 விழுக்காட்டை மாநிலங்களின் பங்காகக் கொடுக்கிறது ஒன்றிய அரசு. இது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதைதான். ஒன்றிய அரசு என்ற ஒன்று இல்லாமல் மாநிலங்கள் தனியாகவே இயங்க முடியும்; ஆனால் மாநிலங்கள் இல்லாமல் ஒன்றிய அரசு என்ற ஒன்று இருக்கவே வாய்ப்பில்லை என்பதுதானே உண்மை!

சிதம்பரம் ட்வீட்
நமது காசை ஒன்றிய அரசுக்குக் கொடுத்துவிட்டு, அதில் பாதிக்கும் குறைவான காசை யாசகம் கேட்பதுபோல் கேட்பது என்றால், அது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதையல்லாமல் வேறென்ன? முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், "மோடியின் சுயசார்பு (?) திட்ட அறிவிப்புகள் ஏழை எளியவர், புலம்பெயர் மக்கள், தினக்கூலிகள், வேலையிழந்தோர் ஆகியோருக்கு பயன் அளிக்காது எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications