தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு...பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?-வேல்முருகன் கேள்வி
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வினவியுள்ளார்.
மேலும், 13 அப்பாவி உயிர்களை பலி வாங்கிய கொலைக்குற்றவாளிகளை அடையாளப்படுத்தாமல் அவர்களை பாதுகாப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஐ விசாரணையில் காவல்துறையினர் பெயரைக் கூட முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை என வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு உறுதுணையாக நிற்பேன் எனவும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

நீதி பதி அருணா ஜொகதீசன் ஆணையம் இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த விசாரணை இன்னும் தொடருவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து தானாக விசாரணையை தொடங்கி முடித்துக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு காலதாமதமின்றி நீதி கிடைத்திட வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிக்கான தனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications