தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு...பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?-வேல்முருகன் கேள்வி
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வினவியுள்ளார்.
மேலும், 13 அப்பாவி உயிர்களை பலி வாங்கிய கொலைக்குற்றவாளிகளை அடையாளப்படுத்தாமல் அவர்களை பாதுகாப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஐ விசாரணையில் காவல்துறையினர் பெயரைக் கூட முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை என வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு உறுதுணையாக நிற்பேன் எனவும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

நீதி பதி அருணா ஜொகதீசன் ஆணையம் இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த விசாரணை இன்னும் தொடருவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து தானாக விசாரணையை தொடங்கி முடித்துக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு காலதாமதமின்றி நீதி கிடைத்திட வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிக்கான தனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications