தனித்து போட்டியிடுவதே பொருத்தமானது, சரியானது.. வேல்முருகன் தில் முடிவு
சென்னை: கடைசியில் தனித்து போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துவிட்டார் வேல்முருகன்!
கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே தமிழக மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்தவர் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். இதற்காக நிறைய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துள்ளார். குறிப்பாக வட மாவட்டங்களில் இவருக்கு செல்வாக்கு அதிகம்.
இந்நிலையில் தேர்தல் சமயம் நெருங்குவதால், கூட்டணி வைத்து போட்டியிடலாம் என முடிவெடுத்திருந்தார் வேல்முருகன்.

தனித்து போட்டி
குறிப்பாக டிடிவி தினகரனுடன் கை கோர்க்கலாம் என்று யோசித்து அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் என்ன காரணமோ தெரியல, திடீரென்று தனித்துபோட்டி என அறிவித்துவிட்டார் வேல்முருகன்.

உடம்பு சரியில்லை
அக்கட்சியின் மாநில சிறப்பு பொது குழு கூட்டம் கடலூர் மாவட்டம் வடலூரில் கடந்த 10-ம் தேதி இரவு நடைபெற்றது. ஆனால் வேல்முருகனுக்கு உடம்பு சரியில்லை. அதனால் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருந்தாலும். தொலைபேசி மூலம் மக்கள் மத்தியில் பேசினார்.

2 சதவீத வாக்கு
அப்போது அவர் சொல்லும் போது, "தரப்போகும் ஒரு தொகுதிக்காக யாரிடமும் யாசகம் கேட்கும் நிலையில் நாம் இல்லை. 2 சதவீத வாக்கு உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போகிறார்கள்.

தனித்து போட்டி
சீமான், சரத்குமார், கமல்ஹாசன் எல்லோரும் தனித்து நிற்கின்றனர். நாமும் தனித்து நிற்கக்கூடாதா? தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்பது பதவிக்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. அதனால் நாமும் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று நமது பலத்தை நிரூபிப்போம்" என்றார். ஆக மொத்தம் வேல்முருகனும் தனித்து போட்டி என்பது கன்பார்ம்ட்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications