தமிழகத்திற்குள் இனி இவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; அரசுக்கு வேல்முருகன் அலர்ட்!
சென்னை: ஓமிக்ரான் கொரோனோ வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவிவரும் சூழலில், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச விமான போக்குவரத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கப் போவதாக அறிவித்துள்ளதை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா வைரஸ்
கொரோனா பாதிப்பில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி, உலக நாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்கள், கடந்த சில மாதங்கள் தான் பணிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். ஒன்றிய அரசின் மோசமான பொருளாதார கொள்கையாலும், கொரோனாவின் பாதிப்பாலும் அதளபாதாளத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க துவைங்கியுள்ளது.

தென்னாப்ரிக்கா
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வரும் விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

அதிர்ச்சி
அதே நேரத்தில், டிசம்பர் 15ஆம் தேதி முதல், சர்வதேச விமான போக்குவரத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் 57 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படும் நிலையில், ஓமிக்ரான் வகை கொரோனா இந்தியாவில் பரவினால் அதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஒமிக்ரான் பரவல்
எனவே, ஓமிக்ரான் கொரோனா பரவலை தடுப்பது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய அவரச கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நோய்த் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications