வரவுக்கும் செலவுக்குமே போதவில்லை... நெல் விவசாயிகள் குமுறல்... வேல்முருகன் ஆதரவு குரல்
சென்னை: நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும் என அவர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முக்கியப் பயிர்
தமிழ்நாட்டின் முக்கிய உணவுப்பொருள் அரிசி. அதனால் தமிழ்நாட்டின் முக்கிய விவசாயமே நெல் சாகுபடிதான். ஆனால் இந்த நெல் சாகுபடிக்கு தொடர்ந்து தடைகள். அதாவது மேட்டூர் அணையிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் முறையாகக் கிடைக்காதது மட்டுமல்ல; நெல்லுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை. இதனால் நெல் சாகுபடியாளர்கள் வாங்கிய கடனையும் அடைக்க முடியாத நிலை. இதன் காரணமாக தற்கொலைச் சாவுகளும் நடக்கும் நிலை. ஆண்டுதோறும் இப்படியான அவல நிலையைத்தான் காண்கிறோம்.

போதிய விலை இல்லை
இந்த ஆண்டும் அதற்கு விலக்கில்லை. நெல் அறுவடையாகும் இந்தப் பருவத்தில் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளை விட்டு அதனை விற்க முடியாத நிலையையும் பார்க்க முடிகிறது. எல்லாவற்றையும் விட அதிர்ச்சி என்னவென்றால், அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல்லுக்கு போதிய விலை இல்லை.

குவிண்டால் ஒன்றுக்கு
தமிழக அரசு குவிண்டால் நெல்லுக்கு ஆதரவு விலையாக, சன்ன ரகம் ரூ.70; பொது ரகம் ரூ.50 என உயர்த்தி அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு சன்ன ரகம், பொது ரகம் இரண்டுக்குமே தலா ரூ.65 ஊக்கத் தொகை அறிவித்தது. இதன்படி குவிண்டால் சன்ன ரகம் ரூ.1905; பொது ரகம் ரூ.1865. இந்தப் புதிய கொள்முதல் விலை 2019 அக்டோபர் 1ந் தேதி முதல் 2020 செப்டம்பர் வரை நடைமுறையில் இருக்கும். அரசுகளின் இந்த விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் குமுறல்
விவசாயத் தொழிலாளர்களின் கூலி, டீசல் விலை, எந்திரங்களின் வாடகை, டிஏபி உரத்தின் விலையேற்றம், யூரியா தட்டுப்பாடு, தண்ணீர்த் தட்டுப்பாடு ஆகியவற்றை ஒன்றிய, தமிழக அரசுகள் கருத்தில் கொள்ளவில்லை எனக் குமுறுகின்றனர் விவசாயிகள். பொன்னி அரிசி கிலோ ரூ.50க்கு மேல் விற்பனையாகிறது. இதன்படி பார்த்தால் ஒரு கிலோ நெல் ரூ.25 என அரசு நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ரூ.19தான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

வேல்முருகன் பட்டியல்
மேற்கண்ட செலவு தவிர, நடவில் இருந்து 3 மாதங்கள் வரை நீர் பாய்ச்சுவது, எலித் தொல்லையைக் கட்டுப்படுத்துவது, வரப்பில் புல்லறுப்பது என நாளொன்றுக்கு ரூ.100 வீதம் மொத்தம் ரூ.9000 கூலியாகிறது. சாகுபடிச் செலவு ரூ.24,625; கூலி ரூ.9000; ஆக ரூ.33,625 ஆகிறது. தமிழக அரசோ, ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.27.50தான் ஆகும் என்கிறது. அப்படியென்றால், கர்நாடக, கேரள, ஆந்திர அரசுகள் நெல்லுக்கான ஊக்கத் தொகையை தமிழக அரசை விடவும் மிகக் கூடுதலாக உயர்த்தி வழங்குவது எப்படி என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.இவ்வளவு செலவுகள் செய்தும், ஒரு ஏக்கரில் 25 அல்லது 30 மூட்டை நெல்தான் கிடைக்கும்.

நிறைவேற்றுக
வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை, உற்பத்திச் செலவை விட 50 விழுக்காடு கூடுதலாக வழங்க வேண்டும் என்று சொல்கிறது. இதைக் கருத்திற்கொண்டு நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. அதை நிறைவேற்ற வேண்டுகிறோம்.வேளாண் அறிஞர் பரிந்துரைப்படி, உற்பத்திச் செலவை விட 50% கூடுதல் விலை இல்லை; நெல் கொள்முதல் நிலையங்களும் இல்லை! இதனால் அறுவடையான நெல்லுக்கு விலையில் இழப்பும், மழையில் நனைந்து சேதமும் ஏற்படுகிறது! எனவே உடனடியாகக் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்; நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications