மக்கள் பாதிப்பு.. சமையல் எரிவாயு விலையை குறையுங்கள்.. முதல்வர் ஸ்டாலினுக்கு, வேல்முருகன் கோரிக்கை!
சென்னை: பெட்ரோல் விலையை குறைத்ததுபோல் சமையல் எரிவாயு விலையையும் குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
கொரோனா காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில், எரிவாயு விலையை மேலும் ரூ.25 உயர்த்தி, ரூ. 902.50 ஆக நிர்ணயம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசின் இத்தகையை நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது.

கடும் கண்டனம்
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு கொரோனா ஊரடங்கால் தொழில் முடக்கம், வேலையின்மை அதிகரிப்பு, வருவாய் இழப்பு ஆகிய காரணங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழுமையாக திரும்பவில்லை. இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது குறித்தோ, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது குறித்தோ சற்றும் சிந்திக்காமல், எரிவாயு விலையை கண்மூடித்தனமாக ஒன்றிய அரசு உயர்த்தி வருவது கண்டனத்துக்குரியது.

நடுத்தர மக்கள் பாதிப்பு
பெட்ரோல், டீசல் மீதான வரியை நாளுக்கு நாள் உயர்த்தி வரும் ஒன்றிய அரசு, தற்போது எரிவாயு விலையை மேலும் ரூ.25 உயர்த்தி உள்ளது. அதாவது, கடந்த டிசம்பர் மாதம் 650 ரூபாய் என்கிற அளவில் இருந்த சமையல் எரிவாயு, தற்போது 902.50-க்கு ரூபாய் எனக் கட்டுக்கடங்காத அளவில் உயர்த்தி உள்ளது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.285 அளவிற்கு எரிவாயு விலை உயர்த்துள்ளது. இதன்மூலம், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் எரிவாயுவை பயன்படுத்த முடியாத அபாய நிலைக்கு ஒன்றிய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தள்ளியுள்ளது.

சர்வாதிகாரத்தின் உச்சம்
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து வரும் ஒன்றிய அரசு, பெண்கள், நடுத்தரக் குடும்பத்தினர், சாமானிய மக்கள் ஆகியோர் மீது கூடுதல் சுமையை ஏற்றி வருவது சர்வாதிகாரத்தின் உச்சம். மோடி பிரதமராக பதவியேற்றத்திற்கு பிறகு, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் ஈட்டிய தொகை எவ்வளவு, அத்தொகை எங்கே என்பது குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. பெட்ரோல்,டீசல், எரிவாயு மீது ஒன்றிய அரசு விதித்துள்ள வரி, வளர்ந்த நாடுகளில் கூட இல்லை.

தமிழக அரசு
எனவே, தமிழக அரசு போன்று, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதோடு, எரிவாயு விலையை திரும்ப பெற ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், பெட்ரோல் விலை 3 ரூபாயை குறைத்த தமிழ்நாடு அரசு, எரிவாயு விலையையும் குறைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?











Click it and Unblock the Notifications