பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை வெளியீடு! பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சென்னை: பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலையை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: "ன் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிட்டமைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் தமிழக மக்களின் சார்பிலும், அதிமுக சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர். இவர் போரிட்ட எந்த ஒரு போரிலும் தோல்வியை கண்டதில்லை என்று வரலாறு சொல்கிறது. இவரது நினைவாக தபால் தலை வெளியிட வேண்டுமென அந்த சமுதாயத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
தமிழக அரசு சார்பிலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலையை வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications