குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. சிபி ராதாகிருஷ்ணன் Vs சுதர்சன் ரெட்டி! ரிசல்ட் இதுதான்! பரபர தகவல்
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடக்கவிருக்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனும், ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியும் களம் காண்கின்றனர். 394 எம்பிக்களின் ஆதரவை பெறுபவர் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கும் நிலையில், 422 எம்பிக்களின் ஆதரவு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு இருக்கும் நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவே வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது.
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடிக்கும். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
இதற்கு முன்பு குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதை ஏற்ற நிலையில், துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

சிபி ராதாகிருஷ்ணன்
தேர்தல் ஆணையம் போட்டி இருந்தால் செப்டம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தது. இந்தத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ கூட்டணி) சார்பில், காராஷ்டிர ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டி இடுகின்றனர்.68 வயதான ராதாகிருஷ்ணன் கோவையைச் சேர்ந்தவர். காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளை கடுமையாக எதிர்த்து வந்தவர். இரண்டு முறை (1998, 1999) மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது மகாராஷ்டிராவின் ஆளுநராக பணியாற்றி வருகிறார். எளிமையான பண்பு, சர்ச்சைகளில் சிக்காத அரசியல்வாதி என்ற பெயர் அவருக்கு உள்ளது.
சுதர்சன் ரெட்டி
மறுபுறம், 79 வயதான சுதர்சன் ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர். குறிப்பாக கறுப்பு பண வழக்கு, நக்சலைட் பிரச்சனை போன்றவற்றில் அவர் வழங்கிய தீர்ப்புகள் வரலாற்று சிறப்புமிக்கவையாக கருதப்படுகின்றன. மேலும், ஆந்திர மண்ணின் மைந்தன் என்ற வகையில், சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு செக் வைக்கும் வகையில், காங்கிரஸ் சுதர்சன் ரெட்டியை களமிறக்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள்
இந்நிலையில், இன்று நடைபெறும் தேர்தலில், மொத்தம் 786 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில் 394 வாக்குகள் பெறும் வேட்பாளர் இந்தியாவின் அடுத்த குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார். மக்களவையில் மொத்தம் 542 எம்பிக்கள் உள்ளனர். அதில் 293 பேரின் ஆதரவு பாஜக கூட்டணிக்கு உள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 240 எம்.பிக்கள் உள்ளனர். அதில் 129 பேர் என்டிஏ கூட்டணியை ஆதரிக்கிறார்கள். இதனால் இரு அவைகளிலும் சேர்த்து 422 வாக்குகள் என்டிஏ கூட்டணிக்கே உள்ளது.
யாருக்கு வெற்றி?
பிஆர்எஸ், பிஜேடி போன்ற கட்சிகள் வாக்குப்பதிவில் பங்கேற்காததால் போட்டி மேலும் ஒருதலைப்பட்சமாகி விட்டது. எனவே சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகவே பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், அது தமிழக அரசியலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும். குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தப் பகுதியில் பாஜக வளர்ச்சிக்கும் இது உதவியாக இருக்கும் என பாஜகவினர் நம்புகின்றனர்.
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications