ஷவர்மாவ விடுங்க... சென்னையில் வட இந்தியர்கள் நடத்தும் சமோசா கடையின் லட்சனம் - மக்கள் புகார்
சென்னை: பெரியமேடு சாலையோரம் வடஇந்தியர்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யும் சாலையோர சமோசா கடை மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட 11 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர்.

வட இந்தியர்களின் சமோசா கடை
இதனிடையே ஷவர்மா சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஷவர்மா போன்ற உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், தான் சென்னையில் வட இந்தியர்களின் சாலையோர சமோசா கடை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சகாதாரக் குறைவு
பெரியமேடு வேப்பேரி நெடுஞ்சாலையில் வட இந்தியர்கள் 4 பேர் இணைந்து சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்தில் சிக்கன் சமோசா, மட்டன் சமோசா, ஸ்பிரிங் ரோல் மற்றும் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இந்த கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் இன்றியும் உணவில் அதிகளவில் நிறம் சேர்த்து பொதுமக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும் இந்த கடையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஈ, கொசுக்கள்
சாப்பிடும் தட்டிலும் உணவு பொருட்களிலும் ஈ, கொசு போன்றவைகள் மொய்க்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சாலையோரம் உள்ள தரமற்ற உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டால் பொதுமக்களின் நலனை காக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications