தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
ஒசூரை அடுத்த சூளகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகிறார்கள். அது போல் வேலூர் வேலப்பாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் திடீர் சோதனை நடத்தப்படுகிறது.

திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், சிவகங்கை பூங்கா அருகே கரந்தை, வல்லம் ஆகிய இரு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
அது போல் போடிநாயகனூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சுப முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம். அதை கருத்தில் கொண்டு 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் 150 டோக்கன்களும், 200 டோக்கன்கள் வழங்கப்படும் இடத்தில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் பல சார்பதிவாளர் அலுவலகங்களில் இப்படி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன.
இத்தகைய சூழ்நிலையில்தான் இன்று தேர்வு செய்யப்பட்ட 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் படையினர் நுழைந்தனர். காலை முதல் பத்திரப்பதிவுகளை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், அலுவலர்களிடம் இருக்கும் பணத்தை பறிமுதல் செய்து கணக்குகளை பார்த்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலையில் உள்ள மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அலுவலக வாயில் கதவு மூடப்பட்டு சோதனை நடந்தது. பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்களிடமும் எந்த அதிகாரியாவது லஞ்சம் கேட்டனரா என லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள அலுவலகம், சாத்தூர், கோவை தொண்டாமுத்தூர், காந்திபுரம், திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
அது போல் தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஏதாவது முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினரா போன்ற விவரங்கள் தெரியவில்லை.
-
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications