தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

ஒசூரை அடுத்த சூளகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகிறார்கள். அது போல் வேலூர் வேலப்பாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் திடீர் சோதனை நடத்தப்படுகிறது.

Vigilance Raids

திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், சிவகங்கை பூங்கா அருகே கரந்தை, வல்லம் ஆகிய இரு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

அது போல் போடிநாயகனூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சுப முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம். அதை கருத்தில் கொண்டு 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் 150 டோக்கன்களும், 200 டோக்கன்கள் வழங்கப்படும் இடத்தில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் பல சார்பதிவாளர் அலுவலகங்களில் இப்படி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன.

இத்தகைய சூழ்நிலையில்தான் இன்று தேர்வு செய்யப்பட்ட 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் படையினர் நுழைந்தனர். காலை முதல் பத்திரப்பதிவுகளை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், அலுவலர்களிடம் இருக்கும் பணத்தை பறிமுதல் செய்து கணக்குகளை பார்த்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலையில் உள்ள மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அலுவலக வாயில் கதவு மூடப்பட்டு சோதனை நடந்தது. பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்களிடமும் எந்த அதிகாரியாவது லஞ்சம் கேட்டனரா என லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள அலுவலகம், சாத்தூர், கோவை தொண்டாமுத்தூர், காந்திபுரம், திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

அது போல் தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஏதாவது முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினரா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+