எம்ஜிஆருக்கு பிறகு ஒரு வாள்.. விஜய்யை குறிப்பிட்ட அமீர்! ஆனா.. இது மிஸ் ஆகுதே!
சென்னை: "எம்.ஜி.ஆர் என்ற வாளை அண்ணா என்னும் போர் வீரன் மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார். அவருடைய திராவிட சிந்தனைகளையும், கருத்துகளையும் எம்.ஜி.ஆர் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார் அண்ணா. அப்போது வீரன் சரியாக இருந்ததால் அந்த வாளும் சரியாக பயன்பட்டது. எம்.ஜி.ஆருக்கு பிறகு கூர்மையான ஒரு வாள் இப்போது கிளம்பியுள்ளது. ஆனால், அந்த வாளைப் பயன்படுத்துவதற்கான சரியான போர்வீரன் இப்போது இல்லை" என்று திரைப்பட இயக்குநர் அமீர் கூறியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது, "எம்ஜிஆர், விஜயகாந்த் வரும்போது தனியாகதான் வந்து அவர்களுடைய அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள். நடிகர்களும் சமூகத்தில் ஒருத்தவங்கதான். பெரும்பான்மையான மக்களுடைய அன்பை பெற்றவர்கள். அவர்களை அரசியலுக்கு வரக்கூடாது என்று நாம சொல்லக்கூடாது.

நான் நேற்றைக்கு ஒரு விவாதத்தில் சொன்னதுதான், இப்ப திரும்பவும் சொல்றேன். எம்ஜிஆர் லட்சக்கணக்கான மக்களுடைய அன்பைப் பெற்ற ஒருவர். அவரை அண்ணா கருவியாக பயன்படுத்திக்கொண்டார். அந்த வாளை அண்ணா கைல எடுத்துக்கிட்டு, அண்ணா என்ற போர் வீரன் ரொம்ப சரியா பயன்படுத்தியதாகத்தான் நான் பார்க்குறேன்.
திராவிட கருத்துக்களை, சிந்தனைகளை எம்ஜிஆர் மூலமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார். அப்போது அந்த வீரன் சரியாக இருந்தால், அந்த வாளும் சரியாக பயன்பட்டது. அதேபோல ஒரு வாள் இப்போது கிளம்பி இருக்கு. எம்ஜிஆர் பிறகு, சக்தி வாய்ந்த கூர்மையான ஒரு வாள் மீண்டும் கிளம்பியுள்ளது. ஆனால், அந்த வாளை பயன்படுத்துவதற்கான சரியான போர் வீரன் இல்லை. எது சரி எது தவறு என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் சரியானவற்றை தேர்ந்தெடுப்பார்கள். வாள் தவறானவர்கள் கைகளுக்கு போய்விட்டால் சிக்கல்தான்.
தமிழ் தேசியம் என்பது எனக்கான விருப்பம். ஆனால், என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நான் முதல்ல இருக்கனும். தமிழ் தேசியத்தை அடைய, என்னுடைய மொழியை, என்னுடைய இனத்தை காக்கணும்னு சொன்னா நான் இருக்கணும். நான் இருக்குறதுக்கே இங்க பிரச்சனையாக ஒரு சக்தி வருது அப்படின்னு சொன்னா, அதை எதிர்ப்பதுதான் என்னுடைய முதன்மை நோக்கமாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.
-
அஜிதாவுக்கு பதவி கொடுக்கறதாதான் விஜய் சொன்னாரு! ஆனால் பிரச்சனையே வேறு! பெண் நிர்வாகி பேட்டி -
மஞ்சள், சிவப்பு நிற பொருட்கள் கொண்டு வரக்கூடாது - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கடும் நிபந்தனைகள் -
'செல்ல மகளே..' ஜனநாயகன் திரைப்படத்தின் 3வது பாடல் வெளியானது! -
ஏற்கனவே உடைச்ச ஃபர்னிச்சர் போதாதா? 10 லட்சம் வாக்காளர்களுக்கு EC நோட்டீஸ்! 2026ல் ஓட்டுபோட முடியாது? -
"நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்" - செங்கோட்டையன் திட்டவட்டம் -
உறுதியானது? தவெக கட்சிக்கு விசில் சின்னம்தான்.. தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்.. விஜய் செம குஷி -
விஜய் ஒரு தூயசக்தி.. ஜனநாயகன் படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்க மாட்டார்.. கொந்தளித்த சீமான்! -
தவெக சார்பாக போட்டியிடும் 10 வேட்பாளர்கள்.. விஜய்யால் தொடர்ந்து சொல்ல முடியுமா? சவால்விட்ட நயினார்! -
காணாமல் போகும் சென்னை பாம்புகள்! லயோலா கல்லூரி ஆய்வில்.. வெளியான ஷாக் தகவல்! -
விட்டுக்கொடுக்காத ஆசிரியர்கள்! தொடர் போராட்டத்தை முடிக்க.. பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தமிழக அரசு! -
தமிழகத்தில் நியூ இயர் வரை மழை இருக்கு! குளிரும் அதிகரிக்கும்.. உஷார் மக்களே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கைரேகை சரிபார்ப்பு வொர்க் ஆகாவிட்டாலும் ரேஷன் பொருட்கள்!












Click it and Unblock the Notifications