Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! புஸ்சி ஆனந்த் கொடுத்த பேனாவில் கையெழுத்திட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இதற்காக இன்று காலை அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் ரோடு ஷோவாக வந்த விஜய் பாலக்கரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி என இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார். இதில் வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

Vijay Files Nomination in Trichy East 51 Restrictions Imposed for Campaign

தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி பிரச்சாரத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். நேற்று மற்றும் நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்பதால் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்த விஜய் அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் பாலக்கரை புறப்பட்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் குவிந்ததால் ரோடு ஷோவாக விஜய் சென்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிட பாலக்​கரை பகு​தி​யில் உள்ள மாநக​ராட்சி 2-வது மண்டல அலு​வல​கத்​தில் தேர்​தல் நடத்​தும் அலு​வலர் முத்து முருகேச​பாண்​டி​யிடம் வேட்​புமனு தாக்​கல் செய்தார். அப்போது தேர்தல் அலுவலர்கள் விஜய் கையெழுத்திட பேனா கொடுத்த போது அதனை வாங்கிய விஜய் பிறகு புஸ்சி ஆனந்த் கொடுத்த பேனாவிலேயே கையெழுத்திட்டார்.

தொடர்ந்து விஜய் திருச்சி காந்தி மார்க்​கெட் பகு​தி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். இதற்​காக அவருக்கு காவல்​துறை சார்​பில் 51 கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. முன்னதாக அங்கு உரிய பாது​காப்பு வழங்​கக் கோரி தவெக நிர்​வாகி​கள் செங்​கோட்​டையன், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருச்சி காந்தி மார்க்​கெட் காவல்​நிலை​யத்​தில் மனு அளித்​தனர். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+