Vijay: ஜனநாயகன், சிபிஐ விசாரணை! 37 நாட்கள் கழித்து இன்று மவுனம் கலைக்கும் விஜய்? மாமல்லபுரத்தில்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று நடைபெறும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஜனநாயகன் படம் குறித்தும் கரூர் கூட்ட நெரிசலில் விவகாரத்தில் தன்னிடம் சிபிஐ விசாரணை குறித்தும் விஜய் வாய் திறந்து பேசுவார் என சொல்லப்படுகிறது.
இதன் மூலம் இத்தனை நாட்களாக மவுனியாக இருந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது பேச்சு இருக்கும் என சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது முதலே விஜய் தொடர்ந்து திமுகவையே விமர்சித்து வந்தார். திமுகதான் தனது எதிரி என்றார், பாஜக கொள்கை எதிரி என்றும் பேசி வந்தார்.
என்னதான் திமுகவை விமர்சித்தாலும் பாஜக குறித்து அவர் விமர்சிக்காதது பெரும் பேசுபொருளானது. இதே கேள்வியை தான் கேட்ட போது விஜய் தன்னிடம் பதில் சொன்னதாக நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார். "அதாவது தற்போதைய தேர்தல் தமிழகத்திற்கானது, எனவேதான் திமுகவை வலிமையாக எதிர்ப்பதாகவும் பாஜகவை அதற்குரிய களத்தில் எதிர்ப்பேன்" என்றும் விஜய் தன்னிடம் கூறியதாக நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார்.
விஜய் ஒவ்வொரு முறையும் பொதுக் கூட்டம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் என்ன பேசுவார், ஆளும் கட்சியை எப்படி நக்கலடிப்பார் என்பதை பார்க்கவே பலர் அவரது பேச்சை கேட்க தொடங்கினர்.
கரூர் சம்பவம்
இப்படி விமர்சனமாக சென்று கொண்டிருந்த போதுதான் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் விஜய் பெரிய அளவில் சிக்கிக் கொண்டார். அதிலும் அவர் இந்த சம்பவம் நடந்ததும் மக்களோடு மக்களாக நிற்காமல் அங்கிருந்து ஜெட் வேகத்தில் சென்னைக்கு வந்ததுதான் மிகப் பெரிய பிரச்சினையானது.
விஜய்
இந்த சம்பவத்திற்கு இன்றுவரை அவர் வருத்தமோ மன்னிப்போ தெரிவித்ததில்லை. இந்த கூட்டத்திற்கு பிறகு காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு பொதுக் கூட்டங்களில் எல்லாம் விஜய் கலந்து கொண்டாலும் இதுவரை கரூர் சம்பவம் குறித்து வருந்தியும் ஒரு வார்த்தை பேசியதில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் ஆகியோரிடம் 20 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை நடத்தியது.
விஜய்க்கு சம்மன்
இந்த நிலையில் விஜய்யிடம் விசாரணை நடத்தவும் சம்மன் அனுப்பி அவர் கடந்த 12ஆம் தேதி, 19ஆம் தேதி என இரு தினங்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் கேள்விகளுக்கான பதில்களையும் எழுதி வாங்கியதாக சொல்லப்படுகிறது.
டெல்லி சிபிஐ
இருமுறையும் விஜய், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது முகம் வாடியிருந்தது. இதனால் அவரிடம் என்னென்ன கேள்விகளை கேட்டார்கள் என்பது குறித்து சமூக ஊடகங்கள், யூடியூப்களில் பல விதமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கூறியிருந்தனர்.
எத்தனை பிரச்சினை
அரசியலில்தான் இத்தனை இடர்பாடு என்றால் சினிமாத் துறையிலும் விஜய்க்கு பிரச்சினைதான். ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதியே ரிலீஸாக வேண்டியது, ஆனால் சென்சார் பிரச்சினையால் ரிலீஸாகாமல் தற்போது அந்த படம் கோர்ட் வரை போய் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. இந்த படம் குறித்தும் தன்னை நம்பி படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் குறித்தும் விஜய் வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
37 நாட்கள் கழித்து
இந்த நிலையில்தான் இன்று மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. 37 நாட்களுக்கு பிறகு அரசியல் நிகழ்வில் விஜய் கலந்து கொள்கிறார். அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் நிறைய விஷயங்களில் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இன்று விஜய் இதையெல்லாம் பேசுவார் என்கிறார்கள்.
ஜனநாயகன் ரிலீஸ்
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ஜனநாயகன் படம் ரிலீஸ் பிரச்சினை குறித்தும் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு சென்றது, கூட்டணி குறித்தும் பேசுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..












Click it and Unblock the Notifications