Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் சேதுபதியின் வெப் சீரியல் கேரவன் ஓட்டிய டிரைவர்.. எமன் இப்படியுமா வருவாரு.. நொடியில் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்பவர் சென்னையில் நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் கேரவன் வாகனம் ஓட்டி வந்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியின் வெப் சீரியல் ஒன்றுக்கு கேரவன் ஓட்டி வந்துள்ளார். திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கேரவனை நிறுத்தியுள்ளார். பின்னர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் லாரிகளால் ஏற்படும் விபத்துக்கள் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஏன் நேரிலும் பார்த்திருப்பீர்கள். அண்மையில் கூட பள்ளி நேரத்தில் வந்த ஒரு தண்ணீர் லாரி, பள்ளி குழந்தைக்கு எமனாக மாறியது. காலை நேரங்களில், குறிப்பாக பள்ளி நேரத்தில் குப்பை லாரிகள், தண்ணீர் லாரிகள், கனரக வாகனங்களை இயக்கவே கூடாது என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் நடைமுறையில் அது இல்லை என்பதே சென்னை பள்ளி மாணவி இறந்து போக காரணமாக இருந்தது.

Vijay Sethupathi s web serial caravan driver talks with friends in chennai what happened

சென்னை லாரிகள்

சென்னையில் பள்ளி சிறுமி மட்டுமல்ல, பல தனியார் நிறுவன ஊழியர்கள், பல அரசு ஊழியர்கள், பல பெண்கள், பல இளைஞர்கள், லாரிகளில் மோதி இறந்துள்ளார்கள். அதேபோல் சில சமயங்களில் லாரிகள் அதிவேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளன. கண் இமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழக்கும் லாரிகள், கூட்டத்தில் புகுந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளன. அப்படித்தான் திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி வெப் சீரியல் கேரவன்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 30 வயதாகும் சேதுபதி என்பவர் நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் கேரவன் வாகனம் ஓட்டி வந்தார். நடிகர் விஜய் சேதுபதியின் வெப் சீரியல் ஒன்றுக்கு தற்போது கேரவன் ஓட்டி வருகிறார். திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தான் ஓட்டி வந்த கேரவனை நிறுத்தி வைத்திருந்தார்.

திருவேற்காட்டில் டிரைவர்கள் போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த சக டிரைவர்கள், தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேதுபதி உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வானகரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களை சமாதானம் செய்தனர். சேதுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வனகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+