10 பேரை வச்சிக்கோங்க! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 குடும்பத்தினரை விஜய் விரைவில் சந்திக்கவுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள அவர்களை வேலுச்சாமிபுரத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தவெக செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கரூர் செல்வதற்கான பணிகளில் விஜய் மகிழ்ச்சியாக இறங்கியுள்ளாராம்.

இந்த தீர்ப்பு வந்ததும் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்தும் நிர்மல் குமாரும் நேற்று வெளியே வந்து நீலாங்கரை இல்லத்தில் விஜய்யை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். புஸ்ஸி ஆனந்த் தார் காரில் வந்து விஜய்யுடன் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினாராம். அவர் பின்னர் புதுவை நோக்கி சென்றுவிட்டார் என்கிறார்கள்.
இந்த ஆலோசனையின் போது அடுத்த கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என நிர்வாகிகள் சொன்னார்களாம். அப்போது விஜய், அடுத்த கட்ட பிரச்சாரத்தை விட கரூரில் மக்களை சந்திப்பதுதான் முக்கியமான விஷயம். ஏற்கனவே நாம் போய் சந்திக்கவில்லை என திமுக நமக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது. இதை உடைக்க கரூர் மக்களை சந்திக்க வேண்டும். அதன்பின்புதான் அடுத்த கட்ட பிரச்சாரம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றாராம்.
எனவே விஜய் விரைவில் கரூர் செல்லவிருக்கிறார். இதற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து விஜய் அறிவித்துள்ளார். இந்த குழு உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து வேலுச்சாமிபுரத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யுமாம்.
அவர்களுக்கான உணவு, பஸ் உள்ளிட்ட வசதிகளையும் தவெக ஏற்பாடு செய்கிறதாம். எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லாமல் வேலுச்சாமிபுரத்திலேயே அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஏதாவது ஒரு மண்டபத்தில் வைத்து விஜய் சந்திப்பார் என தெரிகிறது.
அதாவது 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை சென்னைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு விஜய் ஊக்கத்தொகை கொடுப்பதை போல் பாதிக்கப்பட்ட 41 பேரின் குடும்பத்தினரையும் சந்திப்பார். அவர்களை ஒருங்கிணைத்து பேருந்தில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு பார்த்துக் கொள்ளும்.
-
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள்












Click it and Unblock the Notifications