விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்!
சென்னை: விஜய் ரசிகர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் ஒவ்வொரு நாளும், மோசமாகிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது புதிய அட்ராசிட்டி ஒன்று இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தனது பெற்றோர் விஜய்க்கு வாக்களிக்காமல், திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதாக கூறியதாகவும், எனவே பெற்றோரின் SIR படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்காமல் மறைத்து வைத்துவிட்டதாகவும் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

விஜய் ரசிகர்கள்
விஜய் அரசியலுக்கு வந்த பின்னர்தான், இளைஞர் கூட்டம் சினிமா நட்சத்திரங்கள் மீது எந்த அளவுக்கு வெறித்தனமாக இருக்கிறார்கள் என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது பிரச்சனை கிடையாது. ஆனால், அந்த சினிமா நட்சத்திரம் சொல்வது மட்டும்தான் உண்மை என்று நினைப்பதுதான் சிக்கல். அப்படித்தான் விஜய் ரசிகர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
புதிய பஞ்சாயத்து
விஜய் பிரச்சாரத்திற்கு, மக்கள் சந்திப்புக்கு வருகிறார் எனில், போக்குவரத்து விதிகளை மீறி அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்குவது. அல்லது விபத்தை ஏற்படுத்துவது, சோஷியல் மீடியாவில், விஜய்க்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை அவதூறு அர்ச்சனை செய்வது என்று தொடர்ந்து பஞ்சாயத்துகளை ஏற்படுத்தியிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். அந்த வகையில், தற்போது புதிய பஞ்சாயத்து ஒன்று கிளம்பியிருக்கிறது.
சைக்கோ தற்குறி...😱🤮
— Shafeeq (@shafeeqkwt) April 3, 2026
இந்த தற்குறி, தன் பெற்றோர் TVK-க்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொன்னதால், அவர்களுடைய SIR form-ஐ submit செய்யவே இல்லை. அதையும் ஒரு reel-ஆ பெருமையாக post பண்ணிருக்கான்.
டேய் அறிவு கெட்ட முட்டாள் @TVKVijayHQ
நீ மனித குலத்துக்கே ஒரு அவமானம்டா. pic.twitter.com/euHt3GDwJg
எஸ்ஐஆர் படிவம்
அதாவது இளைஞர் ஒருவர், தனது பெற்றோர் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்று சொன்னதால், அவர்களின் எஸ்ஐஆர் படிவதை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்காமல் மறைத்து வைத்ததாக கூறியிருக்கிறார். "சீமானுக்கு ஓட்டு போடுவேன் என்று சொல்லியிருந்தால் கூட, படிவத்தை சமர்பித்திருப்பேன், ஆனால் என்னைக்கு திமுக-அதிமுகவுக்கு ஓட்டு போடுவோம் என்று சொன்னார்களோ.. அன்றைக்கே, இந்த பவடித்தை சமர்பிப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்" என்று எஸ்ஐஆர் படிவத்தை கையில் வைத்துக்கொண்டு அந்த இளைஞர் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
சர்ச்சை வீடியோ
இது சட்டப்படி குற்றமாகும். தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் படிவங்கள் அரசு ஆவணங்களாகும். இவற்றை மறைத்து வைப்பது, வேண்டுமென்றே தடுத்து வைப்பது சட்டவிரோதமாகும். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 186, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் கீழ் குற்றமாகும். இது குறித்து தேர்தல் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக கைது செய்யப்படலாம். அவருக்கு 6-12 மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா!












Click it and Unblock the Notifications