“நாம் மாற்று சக்தி அல்ல.. முதன்மை சக்தி என்பதை மீண்டும் உணர்த்துவோம்”.. தவெக தலைவர் விஜய் சூளுரை
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபக்தியில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், "மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்." எனத் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 200 அடி நீளமும், 60 அடி அகலம் கொண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. தவெக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை அருகில் பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது.

தவெக மாநாடு 21 ஆம் தேதி மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம்... இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட.. அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துக்கிட்டே இருக்கோம்... வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்... இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்...
— TVK Vijay (@TVKVijayHQ) August 12, 2025
முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு. ஜனநாயகப் போர்ல அவங்கள் வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு... அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி... மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.
மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்.. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" என விஜய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications