பனையூரில் நடக்கும் கோஷ்டி பூசல்.. ஒரு கூட்டத்தை கூட நடத்த தெரியாதா? புஸ்ஸி ஆனந்த்தை விளாசிய விஜய்!
சென்னை: தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரம் குறித்து உடனடியாக தகவல் கசிந்ததையடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை விஜய் விளாசி இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. அதேபோல் பனையூரில் நடக்கும் கோஷ்டி பூசல் காரணமாகவே பாஜக உடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை புஸ்ஸி ஆனந்த் செயல்படுத்த முயன்றததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக பாஜக கூட்டணியில் தவெக இணைவதாக தகவல் கசிந்தது. அரசியல் எதிரி என்று அறிவித்துவிட்டு பாஜக உடன் கூட்டணி அமைப்பதில் முதலில் விஜய்க்கு பெரிய விருப்பம் இல்லை. ஆனால் ஒவ்வொரு நகர்வையும் பார்த்து பார்த்து விஜய் எடுத்து வைத்து வருகிறார். இதனால் பாஜக உடன் கூட்டணி பேசிய போதும் கூட 90 சீட் மற்றும் முதல்வர் பதவி என்று விஜய் தரப்பு டிமாண்ட் வைத்திருக்கிறது.

இந்த டிமாண்ட் காரணமாக அவர்களாகவே பின்வாங்கிட வேண்டும் என்பதே விஜய்யின் கணக்காக இருந்திருக்கிறது. இருப்பினும் பனையூரில் நடக்கும் கோஷ்டி பூசல் புஸ்ஸி ஆனந்த்தை மாற்று திட்டத்தை உருவாக்கிவிட தூண்டியுள்ளது. அதாவது விஜய் சென்னையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட, அப்படியே அருகில் இருக்கும் விருகம்பாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார்.
விஜய்யின் தேர்தல் பணிகளும் ஆதவ் அர்ஜுனா கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெரம்பூரில் விஜய் பிரச்சாரம் செய்யும் பட்சத்தில் அதன் தாக்கம் விருகம்பாக்கம் தொகுதியிலும் எடுபடலாம். ஆனால் தி நகர் தொகுதியில் வெல்வது புஸ்ஸி ஆனந்துக்கு எளிதான விஷயமல்ல. தி நகரில் பாஜக பணியாற்றி வருவதால், அவர்களின் உதவியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மூலமாக பெற முயன்றுள்ளார்.
அப்போது புஸ்ஸி ஆனந்துடன் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. இதனை விஜய்யும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கருத்துக்கள், பனையூர் அலுவலகத்திற்கு வருவதற்குள் அந்த தகவல் கசிந்துவிட்டது. இதனால் கொள்கை எதிரியுடன் விஜய் தரப்பு பேசி வருவது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.
இதன்பின்னர் விஜய் புஸ்ஸி ஆனந்த்தை பனையூர் அலுவலகத்தில் வைத்து விளாசி தள்ளியுள்ளார். ஒரு மாவட்டச் செயலாளர் கூட்டத்தை கூட ரகசியமாக நடத்த தெரியாதா என்று கேட்டிருக்கிறார். இதன் காரணமாக உடனடியாக புஸ்ஸி ஆனந்த் பெரம்பூர் தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா, சென்னையில் தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தி இருக்கிறார்.
அதேபோல் பாஜக உடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற வாதத்தை உடைக்கவே சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளி வந்த போது, காரில் சன் ரூஃப் மேல் ஏறி கையை காட்டி இருக்கிறார். இது களத்தில் நன்றாக வேலை செய்யும் என்பதை அவரது குழுவினர் கூறிய நிலையில், விஜய் டேமேஜ் கண்ட்ரோல் செய்யும் பணிகளில் ஈடுபட்டதோடு, அடுத்த நாளே விளக்க அறிக்கையையும் கொடுத்திருக்கின்றனர்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications