“அரசியலும் வேணாம்.. சினிமாவும் வேணாம் என விஜய் வெளிநாட்டிற்கு செல்வார்”.. முன்னாள் மேனேஜர் பேட்டி
சென்னை: “வரும் தேர்தலில் படுதோல்வி அடைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்கு விஜய் தள்ளப்படுவார். அரசியலும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என்று வெளிநாட்டிற்குத் தப்பி செல்ல உள்ளார்.” என அண்மையில் திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர் பிடி செல்வக்குமார் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் மேலாளராக இருந்த பி.டி.செல்வகுமார். இவர் விஜய் நடித்த 'புலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர். விஜய் நடித்த போக்கிரி, ஆதி, போக்கிரி, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களுக்கு பி.ஆர்.ஓ ஆகவும் பணியாற்றியுள்ளார். சுமார் 27 ஆண்டுகளாக விஜய்க்கு மேலாளராக செயல்பட்டு வந்தார். பின்னர் விஜய்யிடம் இருந்து விலகி கலப்பை மக்கள் இயக்கத்தை பி.டி.செல்வகுமார் நடத்தி வந்தார்.

இந்நிலையில், பி.டி செல்வகுமார் அண்மையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு மாநில திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்த 2 மாதங்களில் பி.டி.செல்வக்குமாருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் பி.டி. செல்வகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக தலைமை கழகத்திலிருந்து முடிவு செய்தால் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன். விஜய் எந்தெந்த தொகுதியில் யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு எதிராக களம் இறங்கி பணியாற்றுவேன். விஜய் ஏழை ரசிகர்களுக்கு செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டுவேன்.
விஜய் தனது ரசிகர்களுக்கு எதுவுமே செய்ததில்லை. பாலாபிஷேகம் நடத்துவது, கட் அவுட் வைப்பது என இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துள்ளனர். இளைஞர்களுக்கு, தனது ரசிகர்களுக்கு வருவாய் பெற எந்த விதமான நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.
தன்னை தேடி கரூர் வந்தவர்கள் உயிரிழந்த போது அங்கிருந்து தப்பித்துச் சென்றவர் தான் விஜய். கப்பல் கவிழ்ந்தால் கூட தன் உயிரை மாய்த்துக்கொண்டு பயணிகளை காப்பாற்றுபவர் தான் கேப்டன். அந்த விஷயத்தில் விஜய் மிகப்பெரிய தவறு செய்து விட்டார். தலைவர் என்றால் அவர்களை நம்பி வந்தவர்களை வாழ வைக்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை போல போலி அரசியல்வாதிகள் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். பல கோடிகளை ஊழல் செய்த செங்கோட்டையன் மக்களுக்கு நல்லது செய்யவா வந்திருக்கிறார் என்றால் இல்லை. மாறாக ஓய்வெடுப்பதற்கு இடம் வேண்டும். அதற்காக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.
வரும் தேர்தலில் படு தோல்வி அடைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்கு விஜய் தள்ளப்படுவார். அரசியலும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என்று வெளிநாட்டிற்குத் தப்பி செல்ல உள்ளார். இளைஞர்களுக்கு விஜய் வரவு பெரும் ஆபத்து” எனக் கூறியுள்ளார்.
-
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்?












Click it and Unblock the Notifications