எந்த குழப்பமும் வரக்கூடாது.. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள்.. தொண்டர்களுக்கு விஜயகாந்த் அறிவுரை
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தேமுதிகவினர் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அதனை எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
அனைத்து இடங்களிலும் தொண்டர்கள் போட்டியிட தயாராக இருக்க வேண்டும். மேலும், எந்தவொரு குழப்பத்திற்கும் இடமளிக்கக் கூடாது. வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் தேமுதிகவிற்கு முக்கியமான தேர்தலாக அமையும்.

வெற்றி வாய்ப்பு
உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வேட்பாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலுக்கான பணிகளில் கழக தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

சரியான முறை
உள்ளாட்சி தேர்தல் என்பது நமது கட்சிக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதால், சரியான முறையில் தேர்தலை எதிர்கொள்ள கழக தொண்டர்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், சட்டசபை தேர்தலாகட்டும் கூட்டணி தேர்வினால் தேமுதிக பெரும் சரிவை சந்தித்து வந்தது.

கூட்டணியில் குழப்பம்
கடந்த சட்டசபை தேர்தலின்போது அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என தேமுதிக காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது. இதையடுத்து பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரனின் வாய் சவடால்களால் திமுகவுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அமமுகவுடன் கூட்டணி வைத்தனர். கள்ளக்குறிச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட்டை இழந்ததுதான் மிச்சம்.

கொள்ளைகள் வெவ்வேறு
கட்சிகள் கோட்பாடுகள், கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும் விஜயகாந்த் மீது ஸ்டாலினுக்கு தனி பாசம் உள்ளது. இதைத்தான் அவர் நேரடியாகவே சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று நலம் விசாரிப்பு மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அது போல் தேமுதிகவில் இருந்து யார் வந்தாலும் திமுகவில் சேர்க்க வேண்டும் என்றும் எனது நண்பர் விஜயகாந்த் மனம் வேதனைப்படக் கூடாது என்றும் தனது மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

திமுக கூட்டணி
தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெறும் என தெரிகிறது. தேமுதிக இழந்த பழைய செல்வாக்கில் சிறிதேனும் மீட்டு கொடுக்க திமுக உதவும் என தெரிகிறது. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் என விஜயகாந்த் தொண்டர்களை அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications