பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மறுத்த விஜயகாந்த்.. 1 கோடி கொடுத்தும் விளம்பரத்திலும் நடிக்கலையே
சென்னை: கோடி கோடியாக சம்பாதித்து பட வெற்றி விழா பார்ட்டி என்றால் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாட்டாராம். அதே போல கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பர படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் விஜயகாந்த்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரராக இருந்தாலும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டது இல்லையாம். அவர் மறைவிற்குப் பிறகு அவரது நண்பர்கள், அவருடன் பழகிய பலரும் விஜயகாந்த் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

சோப்பு பவுடர் விளம்பரத்திற்கு வரும் டீஷர்ட் போட்டு இருப்பார் விஜயகாந்த். அவர் தனது வாழ்நாளில் பிராண்டட் ஷர்ட் போட்டது இல்லை. லைஃபில் கடைசி வரை விஜயகாந்த் 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டது இல்லை" என்று ஒருவர் கூறுகிறார்.
கேப்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை, 15 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கோடிக்கணக்கான மக்களை சம்பாதித்து வைத்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே அவர்கள் இருவருக்கும் எதிராக அரசியல் செய்தவர் விஜயகாந்த்.
சினிமாவிலும், அரசியல் மேடைகளிலும் கம்பீரமாக வலம் வந்த விஜயகாந்த், உடல் நலக்குறைவினால் கடைசி காலத்தில் தளர்ந்து போய் காணப்பட்டார். திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார் விஜயகாந்த். அவரது மரணம் பல லட்சக்கணக்காண மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்றைக்கு சினிமா நடிகர்கள் பலரும் விளம்பர படங்களில் நடிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபல குளிர்பான நிறுவனம் ஒன்று அவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து விளம்பர படத்தில் நடிக்க அழைப்பு விடுத்த போது அதனை ஏற்க மறுத்து விட்டாராம்.
அதே போல விஜயகாந்த் எப்போது பிராண்டட் உடைகளை அணிய விரும்புவதில்லை என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். சினிமாவில் நடித்து பெரிய வெற்றி பெற்ற போது கூட அவரது உணவு பழக்கம் மாறவில்லை. பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் விருந்து வைத்தால் அங்கு சாப்பிட மாட்டாராம். விஜயகாந்திற்கு அசைவ உணவு ரொம்பவே பிடிக்கும். சூட்டிங் ஸ்பாட்டில் நாட்டுக்கோழி குழம்பு, மீன் சாப்பிடுவாராம். தனக்கு கிடைக்கும் உணவு போலவே தன்னுடன் வேலை செய்பவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டவர்.
விஜயகாந்த் மரணத்திற்குப் பிறகு பலரும் அவரது வள்ளல் தன்மை, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், கர்ணன் என்றெல்லாம் போற்றுகின்றனர். பசித்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு கொடுத்த விஜயகாந்த். அவரது மரணத்திற்குப் பிறகும் விஜயகாந்த் பலராலும் நினைவு கூறப்படுகிறார் என்றால் அது அவரது வள்ளல்தன்மையினால்தான்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications