அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும்வரை சாதியை ஒழிக்கமுடியாது.. நாங்குநேரி கொடூரம்.. விஜயகாந்த் ஆவேசம்
சென்னை: நாங்குநேரியில் சாதி வெறியால் 12ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவர் சின்னதுரையும் அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே சாதி வன்மமும், ஆயுத கலாச்சாரமும் தலை தூக்குவதை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் தலைவர்கள் மத்தியில் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவன் சின்னதுரை, அவரது சகோதரி மீது, சக மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
பள்ளி மாணவர்களிடையே சாதிய சிந்தனையை தூண்டி அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி பிரச்சனைக்காக நடக்கும் கொடூர தாக்குதல்களை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் நாங்குநேரியில் முன் விரோதம் காரணமாக விவசாயி வானுமாமலை என்பவரின், பெட்டிக்கடைக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் தீ வைத்து சேதப்படுத்தியதுடன், 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றது. கலவர பூமியாக மாறியுள்ள நாங்குநேரியில், பதற்றத்தை தணிக்கவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி - நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக 12ம் வகுப்பு மாணவன்
— Vijayakant (@iVijayakant) August 13, 2023
சின்னதுரையை அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். pic.twitter.com/ASzZTCwdjJ












Click it and Unblock the Notifications