Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக அறக்கட்டளை நிதியில் பேனா நினைவுச் சின்னம் கட்டுங்க.. மக்கள் பணம் எதற்கு? விஜயபிரபாகரன் பேச்சு!

அரசு சார்பில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதற்கு விஜய பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா நினைவுச் சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் அமைப்பது தவறான விஷயம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில், தேமுதிகவும் இந்த பேனார் நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு, கடந்த ஆண்டு முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பேனா சின்னம்

பேனா சின்னம்

சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்துப் பணிகளை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சுனாமி, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியும் கருவிகளுடனும் அமைக்கப்பட இருக்கிறது. கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் வைக்கக்கூடாது என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அறக்கட்டளை நிதியில்

அறக்கட்டளை நிதியில்

இந்நிலையில் இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும் நடிகருமான விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "திமுக அரசு அமைக்கவிருக்கும் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் குறித்து முதல் ஆளாக அறிக்கை தந்தது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது தவறான விஷயம்" எனத் தெரிவித்தார்.

தைரியமாக

தைரியமாக

மேலும் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் அதே தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் நாங்கள் தைரியமாக களத்தில் இறங்கியுள்ளோம். வெற்றிக்கான வியூகங்களை வகுத்து தேமுதிக தொண்டர்கள் களத்தில் இறங்கி வெற்றிக்கு பாடுபடுவார்கள். வேட்பாளர் ஆனந்த் இளம் வேட்பாளர், மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது" எனத் தெரிவித்தார்.

 தேவையில்லாதது

தேவையில்லாதது

முன்னதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது. மக்களது வரிப் பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+