திமுக அறக்கட்டளை நிதியில் பேனா நினைவுச் சின்னம் கட்டுங்க.. மக்கள் பணம் எதற்கு? விஜயபிரபாகரன் பேச்சு!
அரசு சார்பில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதற்கு விஜய பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை : திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா நினைவுச் சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் அமைப்பது தவறான விஷயம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், தேமுதிகவும் இந்த பேனார் நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு, கடந்த ஆண்டு முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பேனா சின்னம்
சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்துப் பணிகளை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சுனாமி, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியும் கருவிகளுடனும் அமைக்கப்பட இருக்கிறது. கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் வைக்கக்கூடாது என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அறக்கட்டளை நிதியில்
இந்நிலையில் இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும் நடிகருமான விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "திமுக அரசு அமைக்கவிருக்கும் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் குறித்து முதல் ஆளாக அறிக்கை தந்தது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது தவறான விஷயம்" எனத் தெரிவித்தார்.

தைரியமாக
மேலும் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் அதே தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் நாங்கள் தைரியமாக களத்தில் இறங்கியுள்ளோம். வெற்றிக்கான வியூகங்களை வகுத்து தேமுதிக தொண்டர்கள் களத்தில் இறங்கி வெற்றிக்கு பாடுபடுவார்கள். வேட்பாளர் ஆனந்த் இளம் வேட்பாளர், மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது" எனத் தெரிவித்தார்.

தேவையில்லாதது
முன்னதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது. மக்களது வரிப் பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications