திமுக அறக்கட்டளை நிதியில் பேனா நினைவுச் சின்னம் கட்டுங்க.. மக்கள் பணம் எதற்கு? விஜயபிரபாகரன் பேச்சு!
அரசு சார்பில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதற்கு விஜய பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை : திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா நினைவுச் சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் அமைப்பது தவறான விஷயம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், தேமுதிகவும் இந்த பேனார் நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு, கடந்த ஆண்டு முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பேனா சின்னம்
சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்துப் பணிகளை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சுனாமி, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியும் கருவிகளுடனும் அமைக்கப்பட இருக்கிறது. கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் வைக்கக்கூடாது என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அறக்கட்டளை நிதியில்
இந்நிலையில் இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும் நடிகருமான விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "திமுக அரசு அமைக்கவிருக்கும் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் குறித்து முதல் ஆளாக அறிக்கை தந்தது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது தவறான விஷயம்" எனத் தெரிவித்தார்.

தைரியமாக
மேலும் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் அதே தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் நாங்கள் தைரியமாக களத்தில் இறங்கியுள்ளோம். வெற்றிக்கான வியூகங்களை வகுத்து தேமுதிக தொண்டர்கள் களத்தில் இறங்கி வெற்றிக்கு பாடுபடுவார்கள். வேட்பாளர் ஆனந்த் இளம் வேட்பாளர், மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது" எனத் தெரிவித்தார்.

தேவையில்லாதது
முன்னதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது. மக்களது வரிப் பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications