இங்க வாங்க.. முதல்ல ஒரு கமிட்டி போடுங்க.. ஆராயுங்க.. தெளிவுபடுத்துங்க.. விஜயகாந்த் சூப்பர்!
வேளாண் மசோதா குறித்து தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: "புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவையும், அதேபோல், வேளாண் சட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய விவசாய அமைப்புகள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து, அவைகளில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்... எது உண்மை? எது பொய்? என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவது அரசின் கடமை" என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.. எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபையிலும், தமிழகத்திலும் கொந்தளித்து வருகின்றனர்.

ஆனால், இந்த மசோதாவினால் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் எடப்பாடியார் வரை நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த மசோதாக்கள் சம்பந்தமாக விவாதங்களும் சோஷியல் மீடியாவிலும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதக பாதகங்களை ஆராய விவசாய அமைப்புக்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அந்த அறிக்கை இதுதான்:
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதக பாதகங்களை ஆராய விவசாய அமைப்புக்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த சட்டத்தால் ஏற்படும் சாதக பாதகங்களை தெளிவாக ஆராய மத்திய மாநில அரசுகள் குழு அமைத்து, அந்த சட்டத்தால் மக்களுக்கு என்ன பலன் ,என்ன நன்மை, என்ன தீமை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், விவசாய பெருமக்களுக்கு அனைத்து வகையிலும் பயனளிக்கும் வகையில் அமைந்தால் வேளாண் சட்ட வரவேற்கும் என்றும் எந்த விதத்திலாவது மசோதாவை தேமுதிக ஒரு சிறிய பாதிப்பு இருக்குமேயாலும் கூட அதனை தேமுதிக வரவேற்காது.
மேலும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு என அனைத்திற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இல்லையென்றால் எது உண்மை எது பொய் என்பது மக்களுக்கு புரியாமலேயே போய்விடும்.
எனவே தமிழக அரசு இதில் உடல் யாக கவனம் செலுத்தி, புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவையும், அதேபோல், வேளாண் சட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய விவசாய அமைப்புகள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து, இதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications