தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்.. அஞ்சலி செலுத்த வருவோருக்கு சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சென்னை அண்ணாசாலையை ஒட்டி உள்ள தீவு திடலில் வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்ப்பட்டது. அதன்பின்னர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.

அங்கு கட்டுங்கடங்காத கூட்டம் வந்த காரணத்தால் கோயம்பேடு பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இதையடுத்து விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள தீவு திடல் எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இன்று அதிகாலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட விஜயகாந்த் உடல் தீவு திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அமர்ந்து இருப்பதற்கு வசதியாக ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஞ்சலி செலுத்த வருவோருக்காக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,
அனைத்து விஐபி மற்றும் விபிஐபிக்களின் வாகனங்கள், காமராஜர் சாலை, நேப்பியர் பால்ம், போர் நினைவு சின்னம், கொடி பணியாளர் சாலை வழியாக அண்ணா சாலைக்கு தீவுத்திடலின் இடது நுழைவு வழியாக செல்லலாம்.
மற்ற மூத்த திரைக்கலைஞர்களின் வாகனங்கள் பல்லவன் சந்திப்பு வாலாஜா ரோடு வழியாக கொடி பணியாளர் சாலையை அடைந்து தீவுத்திடலை அடையலாம்.
தீவு திடல் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் வேறு சாலையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் அதிக அளவில் உள்ளதால், அவர்களின் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக அனுமதிக்கப்பட்டு, கடற்கரை வாகன நிறுத்தமிடத்தில் வானங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து இருசக்கர வாகனங்கள், தொண்டர்களின் வாகனங்கள், பெரியார் சிலை, சுவாமி விவேகானந்தா சாலை, எம்எல்ஏ ஹாஸ்டல் சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
வணிக வாகனங்கள், வழக்கமான வாகனங்கள் தீவுத்திடலை சுற்றி அனுமதிக்கப்படாது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications