அசைண்மெண்ட் தவெகவிலிருந்து செங்கோட்டையனுக்கு வந்தாச்சு போல? ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்?
சென்னை: செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்யை சந்தித்து பேசிய நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார்..இன்று காலை 10 மணிக்கு இந்த இணைப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.. மூத்த தலைவர் செங்கோட்டையன் விஜய்யுடன் இணைந்துள்ளது, அதிமுகவுக்கு எந்தவகையான சிக்கலை ஏற்படுத்தும்? குறிப்பாக கொங்கு மண்டலத்தில் வாக்கு விகிதத்தில் பாதிப்பை தருமா? என்ற சந்தேகத்தை எழுப்பி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணையபோவதாக செய்திகள் கடந்த 3 நாட்களாகவே பரபரத்து வந்தது.. நேற்றைய தினம் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததுமே, அதிமுக கொடியை தன்னுடைய காரில் இருந்து இறக்கி விட்டார்.

2 மூத்த அமைச்சர்கள்
இதற்கு பிறகு திமுக, பாஜக கட்சிகள் செங்கோட்டையனை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை கடைசி கட்டமாக நடத்தின.. நேற்று முன்தினமே திமுக மூத்த அமைச்சர்கள் 2 பேர் தொடர்பு கொண்டு செங்கோட்டையனிடம் பேசினார்களாம்..
திமுகவுக்கு வந்துவிடுங்கள்,அமைப்பு செயலர், மாவட்டச் செயலர் பதவி தர, முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார் என்றாராம்.. ஆனால் செங்கோட்டையன் தவெகவில் இணையும் முடிவில் உறுதியாக இருப்பதாக அவர்களிடம் சொல்லி விட்டாராம்.
நேற்றைய தினம் சபாநாயகர் அப்பாவு அறைக்கு செங்கோட்டையன் வந்தபோது, அவரை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசியிருக்கிறார்.. முதல்வர் தரப்பில் சொல்லப்பட்ட முக்கிய தகவலை சொன்னாராம். அப்போதும் செங்கோட்டையன் அமைதியாகவே இருந்தாராம்.
கடைசி நேரத்திலும் முயற்சி
பிறகு டெல்லியில் தங்கியிருக்கும் நயினார் நாகேந்திரனும், செங்கோட்டையனுக்கு போனை போட்டு பேசியிருக்கிறார்.. அவசரப்பட வேண்டாம், டெல்லி கிளம்பி வாங்க, பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், பாஜகவில் சேர்ந்துவிடுங்கள் என்றாராம். அதற்கும் செங்கோட்டையன் மறுப்பு சொல்லி விட்டாராம். இறுதியில் விஜய்யை சந்தித்து பேச, இன்று செங்கோட்டையனுக்கு இணைப்பு விழா உறுதியாகிவிட்டது.
செங்கோட்டையனை பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரசாரப் பயணத்தை வகுத்து தந்த அனுபவம் கொண்டவர்.. மேலும், கொங்கு மண்டல களத்தில் அவரது செயல்பாடு எப்போதும் அதிமுக தலைமைக்கு திருப்தியை மட்டுமே தந்து வந்திருக்கிறது... அந்தவகையில், செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் விஜயுடன் இருந்தால், அது தவெகவுக்கு பலம் சேர்ப்பதுடன், கொங்கு மண்டலத்தின் தவெக வாக்கு வங்கியையும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் அசைன்மென்ட்
அதற்கேற்றபடி, மற்றொரு தகவலும் இணையத்தில் கசிந்து வருகிறது.. அதாவது ஈரோடு மாவட்டத்தில் தன்னுடைய அடுத்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.. செங்கோட்டையன் இன்று கட்சியில் இணைந்துள்ள நிலையில், அவரது சொந்த மாவட்டத்திலேயே விஜய்யின் மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக தமிழக அரசியலின் கவனத்தை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்ல, வரும் 30ம் கோபி செட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின் 2ம் கட்டத்தை துவங்குகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த துவங்கிவிட்டது.
செங்கோட்டையன் பவர் கூடுகிறது
இன்று செங்கோட்டையன் கட்சியில் இணைந்ததுமே, ஈரோடு கூட்டம் பற்றி செங்கோட்டையனிடம் விஜய் விவாதிக்ககூடும் என்று தெரிகிறது.. ஈரோடு மட்டுமல்ல, இனி விஜய்யின் அரசியல் பயணத்தின் திட்டங்களையும், பிரச்சார வியூகங்கள் உள்ளிட்ட அரசியல் சூட்சுமங்களையும், செங்கோட்டையனே வகுத்து தரலாம் என்கிறார்கள்.
மேலும், தவெகவில் இப்போதைக்கு மூத்த தலைவர்கள் யாரும் இல்லாததால், செங்கோட்டையனுக்கு இரண்டாம் இடம்கூட கிடைக்கலாம்.. அவ்வளவு ஏன்? கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் செங்கோட்டையனே நடத்தலாம் என்கிறார்கள்..
எடப்பாடி பழனிசாமி
மேற்கூறிய செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு சாத்தியமானால், அது அதிமுகவுக்கு குறிப்பாக ஈரோடு அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்தாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்..
தற்போது தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி தர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இதுவும் அதிமுகவின் கவனத்தை பெற்று வருகிறது.
செங்கோட்டையனின் தவெகவின் ஐக்கியத்தை, எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்க போகிறார்? செங்கோட்டையனுடன் சில அதிமுக நிர்வாகிகள் செல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில், அவர்களை எப்படி தடுத்த நிறுத்த போகிறார்? என்பதெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து












Click it and Unblock the Notifications