சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு... இனி தொட்டதெல்லாம் தங்கம்தான்... சொல்வது யாருனு பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: வீட்டுக்குள் இருந்து கொண்டு வீடியோ காலில் விடியலை தேடாமல், மக்களில் ஒருவனாய் வீதிக்கு வந்து பரப்புரை ஆற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொட்டதெல்லாம் வெற்றியே என நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாட்சியை சாகடித்து சவடால் பேசுபவர் அல்ல எனவும் தந்தையே நம்பாத மகனும் அல்ல என்றும் விந்தியா கூறினார்.

Vindhya said everything touched by Edappadi Palanisamy was a victory

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் பிரசாரத்தை துவக்கி உள்ளன. திமுக தரப்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில் நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

டுவிட்டரில் வெளியிட்ட பதில் அவர் கூறுகையில், வாரீசு கோட்டாவில் வளர்ந்த மாறனோ பேரனோ அல்ல, சாட்சியை சாகடித்து சவடால் பேசுபவர் அல்ல, தந்தையே நம்பாத மகனும் அல்ல, வீட்டிற்குள் இருந்து கொண்டு வீடியோகாலில் விடியலை தேடாமல் மக்களில் ஒருவனாய் வீதிக்கு வந்து பரப்புரை ஆற்றும் எங்கள் மக்களின் முதல்வருக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றியே... என விந்தியா கூறி உள்ளார்.இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
Actress and AIADMK Deputy Secretary for Policy Extension Vindhya said that everything that came to the notice of Chief Minister Edappadi Palanisamy, who came to the streets and campaigned without looking for the dawn on video footage from home, was a success
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X