கோவில்கள் ஆளும் கட்சியின் கூடாரமா? அவமதிக்கப்படும் பக்தர்கள்.. ’இது’ கூடவே கூடாது! பறந்த கண்டனம்!
சென்னை: கோவில்கள் ஆளுங்கட்சியின் கூடாரமா? கோவில் விழாக்களில் பக்தர்கள் அவமதிக்கப்படுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது எனவும், எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மற்றும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கு முன்னுரிமை கொடுத்து விட்டு, பக்தர்களை அவமதிக்க கூடாது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஶ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கும் வைபவத்தின் போது பக்தர்களை தரிசிக்க விடாமல் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் பெரும்பான்மையாக ஆக்கிரமித்துள்ளனர்.

இத்தகைய போக்கு பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சில பக்தர்கள் மன வேதனையுடன் ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருபுறம் நாத்திகம் என்ற பெயரில் இந்து நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசியும், வேற்று மத நம்பிக்கையை உயர்த்தி பிடிப்பவராக இருந்து கொண்டும் இருக்கும் இந்த திராவிட மாடல் அரசியல் வாதிகள், கோவில் விழாக்களில் முன்னிலையில் நின்று பக்தர்களை அவமதிக்கின்றனர்.
கோவில் விழாக்களுக்கு முன்னிலையில் நிற்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளில் யாராவது ஒருவராவது அதே கோவிலில் திருட்டு நடக்கும்போதும், கோவில் நம்பிக்கைக்கு அவமதிப்பு ஏற்படும் போதும் முன்வந்து போராட வருகிறார்களா? பரிவட்டம் கட்டி தங்கள் செல்வாக்கை காட்டிக் கொள்ளவும், தற்பெருமைக்கும் தான் கோவிலுக்கு வருகிறார்கள் என்பதே உண்மை.
இது வைகுண்ட ஏகாதசியன்று மட்டும் நடக்கும் சம்பவமல்ல. திருவண்ணாமலை தீபம், தைப்பூசம், ஆடிப்பூரம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா என்று தமிழகத்தின் எந்த ஆன்மீக, கோவில் விழாவாக இருந்தாலும் இந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் அரங்கேறுகிறது. இத்தகைய சுயநலவாதிகள் மனிதர்களாகவே மதிக்க தக்கவர்கள் இல்லை என்பதே மக்களின் கருத்தாகும்.
இதுவே மற்ற மாநிலங்களில் இத்தகைய விஐபி கலாச்சாரம் பெரிதாக இருப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். எத்தனை ஆயிரம் பக்தர்கள் தரிசிக்க தக்க நடவடிக்கையை எடுக்கிறார்கள். அதிலும் சில அசம்பாவிதங்களிலும் நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே வருங்காலத்தில் கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் பக்தர்களுக்கு முன்னுரிமையும் அனைவரும் இறைவனை தரிசிக்க தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கனிவுடன் செய்ய தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் செய்ய வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மற்றும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கு முன்னுரிமை கொடுத்து விட்டு, பக்தர்களை அவமதிக்க கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது." என கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications