Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தலையிடாதீங்க யாரும்".. முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் வைத்த முக்கிய கோரிக்கை..!

விருதுநகர் பாலியல் சம்பவ வழக்கு குறித்து வானதி அறிக்கை வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து, பாஜகவின் வானதி சீனிவாசன் மிக முக்கிய கோரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்.

விருதுநகரில் நடந்த பாலியல் சம்பவத்தின் கொந்தளிப்பு, தமிழகம் முழுவதும் இன்னும் அடங்கவே இல்லை.. குறிப்பாக விருதுநகர் மக்கள் கடுமையான அதிர்ச்சியில், வருத்தத்தில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், 8 பேர் மீதும் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 திமுக நிர்வாகி கைது

திமுக நிர்வாகி கைது

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளான ஹரிஹரன், ஜுனைத் அகமது போன்றோர் இந்த பெண் மட்டுமல்லாது இப்படி பல பெண்களையும் இதற்கு முன்பு நாசம் செய்துள்ளதாக கூறப்படுவது மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது.. எனவே, இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரிக்க துவங்கி உள்ளனர்.. பட்டியலின இளம்பெண் மீதான இந்த பாலியல் அத்துமீறல் கொடுமை வெடித்து கிளம்பியபோதே, பாஜக இதை கையில் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியது.

 பாஜக முடிவு

பாஜக முடிவு

எனவே, விரைவில் திமுக அரசை கண்டித்தும், திமுக நிர்வாகிகளால் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் அத்துமீறலை கண்டித்தும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில்தான், பாஜகவின் மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும் என்று மிக முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

 வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக, வானதி ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: "விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்துபல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இளம் பெண்ணை சீரழித்த மனித மிருகங்கள் அனைவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

 மரண தண்டனை

மரண தண்டனை

அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும்.. இதுபோன்ற கொடூரமான குற்ற வழக்குகளை, கால தாமதமின்றி விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள், தைரியமாக புகார் கொடுக்கும் அளவுக்கு சூழல் உருவாகவில்லை என்பதையே, விருதுநகரில் நடந்த இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

பாரபட்சம்

பாரபட்சம்

எனவே, பாதிக்கப்படும் பெண்கள், தைரியமாக புகார் கொடுக்கும் அளவுக்கு சூழலை காவல் துறையும், தமிழக அரசும் உருவாக்க வேண்டும். இனி, இதுபோன்ற கொடூரங்கள் நடக்காதவாறு உறுதியான நடவடிக்கைகளை காவல் துறையும், தமிழக அரசும் எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. வானதியின் இதே கோரிக்கையைதான், பாரபட்சமின்றி அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.. எனினும், இந்த விஷயம் வெளியானதுமே 8 பேரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.. அத்துடன் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகியை கட்சியில் இருந்தே நீக்கி உள்ளனர்..

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

எல்லாவற்றிற்கும் மேலாக, "விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என்று டிஜிபியிடம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. அந்த வகையில், அரசியல் தலையீடு இல்லாமல், விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தரப்படும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+