எஸ்பிபியின் பள்ளி தோழரும்...அவரது உடல்நலத்தை கவனித்துக் கொண்டவரும் அவர்தான்!!
சென்னை: கிரிக்கெட் விளையாட்டை மிகவும் விரும்பி பார்க்கும் எஸ்.பி.பியின் ஆர்வத்தை கேள்விப்பட்ட சச்சின், தனது கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
பல லட்சம் ரசிகர்கள் கலங்க வைத்து இந்த மண்ணை விட்டு பிரிந்து இருக்கும் எஸ்பிபி பாடகர் மட்டுமில்லை. தமிழில் ரஜினிகாந்த், ராதா நடித்த, ''துடிக்கும் கரங்கள்'' படம் முதல் பல மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார், பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில், சிவாஜி கணேசன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர். ஆனால், பாரதிராஜா வற்புறுத்தியும் எஸ்பிபி மறுத்து விட்டார். இதற்கு காரணம் பல படங்களில் பாடுவதற்கு கமிட் ஆனதால், தொடர்ந்து 40 நாட்களுக்கு நடிப்பதற்கு கால்ஷீட் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

புல்லாங்குழல் வாசிப்பதிலும் வல்லவர். கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடி மூச்சு எடுக்கும்போது. அந்தப் பாடலை கேட்பவர்களுக்கும் மூச்சு நின்று விடுவது போன்ற உணர்வு ஏற்படுவது உண்டு.
ரஷ்யாவை தவிர பெரும்பாலான நாடுகளுக்கு சென்று வந்தவர் எஸ்பிபி. எஸ்.பி.பி ஓவியங்கள் வரைவதில் வல்லவர். புல்லாங்குழலும் வாசிப்பார். எஸ்.பி.பியின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்பம் முதல் இன்றுவரை அவருடன் இருக்கிறார். எஸ்.பி.பியின் கால்ஷீட் மற்றும் உணவு, உடல்நலம் ஆகியவற்றை எல்லாம் பார்த்துக்கொள்பவர் அவர்தான்.












Click it and Unblock the Notifications