Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை சாலைகளில் ராணுவ டாங்கிகள்.. போர் ஒத்திகைக்காக லாரிகளில் வந்து இறங்குகின்றன!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் 4 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ள நிலையில், சென்னைக்கு ராணுவ டாங்கிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

Wartime Drills Across India Tomorrow Military Tanks Arrive in Chennai

மேலும் இரு நாடுகளும் ஏவுகணை சோதனை, எல்லையில் பாதுகாப்பு குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது.

இந்திய எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல், போர் மற்றும் ஏவுகணை தாக்குதல் எதிரிகள் தாக்கும்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எப்படி தங்களைப் பாதுகாத்து கொள்ள வேண்டும். அந்நாட்டினர் எல்லைக்குள் நுழைந்தால் சைரன் ஒலிப்பது, மின் தடை ஏற்பட்டால் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பயிற்சி என்பது பொது மக்களின் பாதுகாப்பை உள்ளடக்கியது. ஒருவேளை மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டால் தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சி நடத்தப்பட உள்ளது. போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது மற்றும் வெளியேற்றுவது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய நான்கு இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், போர் ஒத்திகைக்காக ராணுவ டாங்கிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெறும் போர் ஒத்திகைக்காக ராணுவ டாங்கிகள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. பூந்தமல்லி சாலையில் ராணுவ டாங்கிகள் லாரிகளில் அணிவகுத்த காட்சி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+