சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. அமலுக்கு வரும் 50 குடிநீர் ஏடிஎம்.. எங்கெல்லாம் அமைக்கப்படுகிறது?
சென்னை: சென்னையில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் 24 மணிநேரமும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகிக்கும் வகையில் 50 குடிநீர் ஏடிஎம்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னையில் ஆண்டுதோறும் மக்கள்தொகை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீரை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும். இதற்கான பணிகளை தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணிநேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் புதிய திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
அதாவது சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் ஏடிஎம்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை தொடங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் ஏடிஎம்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுவப்பட உள்ளது.
அதன்படி கடற்கரை, பூங்கா, பேருந்து நிலையம், மார்க்கெட்டுகளில் இந்த குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை விரைவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இப்போது முதற்கட்டமாக பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்க்கெட், சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் உள்பட 40 இடங்களில் குடிநீர் ஏடிஎம் நிறுவுவதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த குடிநீர் ஏடிஎம்களில் விநியோகிக்கப்படும் தண்ணீர் என்பது சுத்திகரிப்பட்ட பிறகு வழங்கப்படும். தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்ஓ மற்றும் யூவி முறைகள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஏடிஎம்களில் குறைந்தபட்சமாக 150 மில்லி லிட்டர் தண்ணீரையும், அதிகபட்சமாக 1 லிட்டர் தண்ணீரையும் பொதுமக்களால் பெற்று கொள்ள முடியும்.
பொதுமக்கள் தண்ணீர் பாட்டில்களை கொண்டு சென்று குடிநீர் ஏடிஎம்களில் கட்டணம் செலுத்தி சுத்தமான குடிநீரை பெற முடியும். இது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். இதற்காக குடிநீர் ஏடிஎம்மில் நீரின் அளவு குறையும்போது அல்லது மின்னழுத்தம் குறைவாக இருக்கும்போதும் எச்சரிக்கை சமிக்ஞை காண்பிக்கப்படும். அதனை பார்த்து உடனடியாக சுதாரித்து கொள்ளவும் முடியும்.
-
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? - வீடியோ தீயாகப் பரவிய நிலையில் அவரே கொடுத்த விளக்கம் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்!












Click it and Unblock the Notifications