நீர் மேலாண்மையில் நாட்டிலேயே தமிழகத்திற்கு 3வது இடம்.. நெகிழ்ந்த துரைமுருகன்.. முதல்வருடன் சந்திப்பு
சென்னை: நீர் மேலாண்மையில் இந்திய அளவில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளதையடுத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதல்வர் மு.க .ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடு குறித்து இத்துறையின் சிறப்புக் குழு மாநிலவாரியாக கள ஆய்வு மேற்கொள்கிறது.
சிறப்பாக செயல்பட்ட மாநிலத்துக்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் 3வது இடம்
அந்த வகையில், கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை ஜல்சக்தித் துறை வெளியிட்டது. இதில், உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தையும், ராஜஸ்தான் 2-வது இடத்தையும், தமிழகம் 3-வது இடத்தையும் பெற்றுள்ளன. சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான விருதுகளில் தென்மண்டல அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

விருது பட்டியல்
சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் மதுரை மாநகராட்சி 3-வது இடத்தையும், சிறந்த பள்ளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளன. சிறந்த தொழில் பிரிவில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 2-ம் இடத்தையும், சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

முதல்வரை சந்தித்த துரைமுருகன்
இந்நிலையில், விருது அறிவிக்கப்பட்ட தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது, நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பள்ளிக்கல்வித் துறைகள்,தொண்டு நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றை சேர்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் தனது பாராட்டுகளையும், வாழ்த்து களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு விருதுகள்
தேசிய நீர் மேலாண்மை விருது மட்டுமல்லாது தமிழகத்திற்கு இந்த வருடம் தொடர்ந்து பல விருதுகள் கிடைத்திருக்கிறது. உதாரணத்திற்கு சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலம், தூய்மை நகரங்களுக்கான விருது ,தூய்மை இந்தியா திட்ட விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கடந்த மாதத்திலும், இந்த மாதத்தில் தமிழகம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications