மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் புகுந்தது வெள்ளநீர்.. கருவறையை தொட்டு நிற்கும் நீரால் பரபரப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அது போல் தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் மட்டுமல்லாது அருகில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிவதால் அந்த தண்ணீர் ஊருக்குள் சென்று மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது...

கனமழை
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாரான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அது போல் செங்கல்பட்டு மாவட்டம் மேலைமையூரில் உள்ள ஏரி நிரம்பி அந்த நீர் ஊருக்குள் புகுந்துவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம்
அது போல் ஏரிகளின் மாவட்டம் என சொல்லப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறைய ஏரிகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் எல்லாம் அறு போல் தண்ணீர் ஓடுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

ஆதிபராசக்தி கோயில்
இந்த நிலையில் உலக புகழ் பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், செங்கல்பட்டு, செய்யூர் பகுதிகளில் தலா 18 செ.மீ. மழை பெய்துள்ளது. அது போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பாக்கத்தில் 17 செ.மீ. மழையும் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 16 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
Recommended Video

சென்னை
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ரெட் அலர்ட் பகுதியில் உள்ளன. இந்த நிலையில் மேல்மருவத்தூருக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் தண்ணீர் தேங்கியுள்ளது அவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. கருவறை வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கருவறைக்குள் வெள்ளநீர் போகாமல் தடுக்க அதன் வாயிலில் மணல் மூட்டைகளை வைத்து கோயில் நிர்வாகம் அடுக்கியுள்ளது. கோயிலுக்குள் புற்றுக் கோவிலும் உள்ளது என்பதால் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications