Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி குடும்பத்தின் கொத்தடிமைகள்தான் நாங்க.. பெருமையாக சொன்ன வி.பி.ராசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛நாங்கள் கருணாநிதியின் அடிமைகள் என்று சொல்வோமே. அதேபோல் கருணாநிதி குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும், கழகத்தின் சார்பில் உழைக்கின்ற கொத்தடிமைகள் என்று சொன்னால் கூட எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் அடிமைகள் தான்'' என்று நேற்று திமுகவின் முப்பெரும் விழாவில் பேராசிரியர் விருது வாங்கிய விபி ராசன் பெருமையாக கூறியுள்ளார்.

இந்த விழாவில் பேராசிரியர் விருது என்பது விபி ராசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு விபி ராசன், ‛‛விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எனது கல்லூரி காலத்தில் திமுகவில் இணைந்தேன். மாணவரணியில் உறுப்பினராக சேர்ந்தேன். இன்று வரை தொய்வில்லாமல் பணி புரிந்து கொண்டு இருக்கிறோம். நாங்கள் தொய்வில்லாமல் பணி புரிவதற்கு இந்த இயக்கம் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து கொண்டிருக்கிறது.

dmk mk stalin vp rajan politics

தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருக்கிறது. முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் திமுக தொடங்கி 75வது ஆண்டுகள் ஆவதையொட்டி பவளவிழா, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்தநாள் என முப்பெரும் விழா நேற்று நடந்தது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை இந்த முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் திமுகவினருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் திமுகவின் முன்னாள் எம்எல்ஏ விபி ராசனுக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை வழங்கினார்.

அதன்பிறகு விபி ராசன் தனியார் தெலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‛‛பேராசிரியர் விருது பெற்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விபி ராசன்,‛‛கருணாநிதி காலத்தில் இருந்து உழைத்து கொண்டிருக்கிறோம். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் காலத்தில் உழைத்து கொண்டிருக்கிறோம். இப்போது உதயநிதி ஸ்டாலினின் நல் அன்பை பெற்று அவரது நல்ல மதிப்பை பெறுகிற வகையில் உழைத்து கொண்டிருக்கிறோம்.

ஆகவே எங்களின் நோக்கமும், விருப்பமும், குறிக்கோளும் கருணாநிதி குடும்பம் தான் இந்த நாட்டை ஆள வேண்டும். கருணாநிதி குடும்பம் தான் கட்சியை நடத்த வேண்டும் என்ற பெரிய நோக்கத்தோடு பணிபுரிகிறோம். நாங்கள் கருணாநிதியின் அடிமைகள் என்று சொல்வோமே.. அதேபோல் கருணாநிதி குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும், கழகத்தின் சார்பில் உழைக்கின்ற கொத்தடிமைகள் என்று சொன்னால் கூட எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் அடிமைகள் தான்'' என பதிலளித்தார்.

திமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு முதல்வர் முக ஸ்டாலின் தான் தலைவராக வந்தார். அதேபோல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது முக ஸ்டாலின் தான் துணை முதல்வராக இருந்தார். தற்போதும் முதல்வர் ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் எதிர்க்கட்சியினர் திமுகவினரை கருணாநிதி குடும்பத்தின் அடிமைகள் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் விபி ராசன் நாங்கள் கருணாநிதி குடும்பத்தின் அடிமைகள் இல்லை. கொத்தடிமைகள் என்று சொன்னால் கூட பரவாயில்லை என்று பெருமையாக கூறியுள்ளார்.

இப்படி பேசியுள்ள விபி ராசன் யார் என்றால் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் 1989ம் ஆண்டில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். 1996 தேர்தலில் எம்எல்ஏ ஆனார். இவர் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக கூட வருவார். எனக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. ஆனால் அதுவரை எனக்கு ஆயுள் இருக்குமா என்பது தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை முதலமைச்சராக்கி விட்டு தான் என் உயிர் போக வேண்டும். இன்பநிதி வரும் காலத்தில் தமிழக முதல்வர் ஆவார் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+