போனில் நடந்த டீலிங்?.. ஹு இயக்குனரிடம் பேசிய ஜிங்பிங்.. ஜெர்மன் புகாருக்கு உலக சுகாதார மையம் பதிலடி!
சீன அதிபர் உடன் உலக சுகாதார மையம் ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை, உண்மைகள் எதையும் நாங்கள் மறைக்கவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: சீன அதிபர் உடன் உலக சுகாதார மையம் ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை, உண்மைகள் எதையும் நாங்கள் மறைக்கவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் சீனாதான் என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் புகார் வைத்து வருகிறது. சீனா இந்த வைரஸ் குறித்து தொடக்கத்தில் மறைந்தது. இதுதான் வைரஸ் பரவலுக்கு காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதில் அமெரிக்கா ஒருபடி மேலே போய் கொரோனா வைரஸ் பரவலுக்கு உலக சுகாதார மையமும் ஒரு காரணம், சீனாவுடன் சேர்ந்து உலக சுகாதார மையம் உண்மைகளை மறைத்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

ஜெர்மன் புகார்
தற்போது இந்த பரபரப்பை அதிகரிக்கும் வகையில் ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்று முக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டது. ஜெர்மன் செய்தி நிறுவனம் டெர் ஸ்பீகல் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவும் என்பது உலக சுகாதார மையத்துக்கு தெரியும். ஆனால் அதை உலக சுகாதார மையம் மறைத்து வந்தது. வேண்டுமென்றே உலக சுகாதார மையம் மறைத்தது.

போனில் நடந்த பேச்சு
உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் ஜனவரி 21ம் தேதி போனில் பேசினார். அதில் இந்த கொரோனா குறித்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் என்ற உண்மையை வெளியே சொல்ல கூடாது என்று ஜி ஜிங்பிங் , டெட்ராஸிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் டீலிங் மேற்கொண்டு உள்ளனர் என்று அந்த ஜெர்மன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

செய்தி பொய்யானது
இந்த கட்டுரை உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது தொடர்பாக உலக சுகாதார மையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ஜெர்மன் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது. அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. உலக சுகாதார மையம் சீனா இடையே எந்த விதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. அந்த செய்தி பொய்யானது .

மறுப்பு தெரிவித்தது
ஜி ஜிங்பிங்கிடம் டெட்ராஸ் ஜனவரி 21ம் தேதி பேசவில்லை. நாங்கள் 20ம் தேதி கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் என்று அறிவித்துவிட்டோம். உலகில் இருந்து கொரோனாவை விரட்டு உலக சுகாதார மையம் தீவிரமாக முயன்று வருகிறது. இதில் நாங்கள் மக்களிடம் இருந்து எந்த விதமான விஷயங்களையும் இதுவரை மறைத்தது கிடையாது என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்று, உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications