ரிவால்டோ யானை காட்டுக்குள்தான் இருக்கிறது.. கண்காணித்து வருகிறோம்.. ஹைகோர்ட்டில் அரசு தகவல்
சென்னை: ரிவால்டோ யானை தற்போது காட்டுக்குள்தான் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தமிழ்நாடு அரசின் வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது.
நீலகிரி மசினகுடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானை சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பெரிய அளவில் காட்டு பகுதிகளுக்கு செல்லாமல், மனிதர்கள் வாழும் இடங்களுக்கு அருகே இந்த யானை சுற்றி வந்தது.
தற்போது இதன் தும்பிக்கை சுருங்கி பாதிப்பு ஏற்பட்டதால் இதற்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை வனத்துறையினர் ஒவ்வொருமுறை காட்டுக்குள் சென்று விட்டாலும் மீண்டும் மக்கள் இருக்கும் பகுதிக்கு வந்து விடுகிறது. மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதிக்கு மீண்டும் மீண்டும் இந்த யானை திரும்பி வந்து விடுகிறது.

வழக்கு
இந்த நிலையில் இந்த யானையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அதில் இந்த யானையை காட்டுக்குள் விட கூடாது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அதன்பின் அந்த யானையை திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உடல்நிலை
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மனுதாரர் தரப்பு, அந்த யானை பெரிய அளவில் காட்டுப்பரப்பில் வாழ்ந்தது கிடையாது. இதனால்தான் மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் சுற்றி வருகிறது. இதன் உடல்நிலையும் இப்போது சரியில்லை. இதனால் அதனை முகாமில் விட வேண்டும் என்று வாதம் வைத்தார்.

கேள்வி
இந்த வழக்கில் தமிழ்நாடு வனத்துறையின் நிலைப்பாடு என்ன? யானையின் மறுவாழ்விற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தமிழக வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரிவால்டோ யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதற்கு ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சாத்தியம்
வாழைத்தோட்டம் பகுதியில் சிகிச்சை அளித்து காட்டுக்குள் விட்டு இருக்கிறோம். காட்டுக்கு அனுப்பும் முதல் முயற்சி தோல்வியடைந்தது. ஆனால் மீண்டும் முயற்சி செய்து அதை காட்டுக்குள் விட்டுள்ளோம். அந்த யானை தற்போது வரை திரும்பி வரவில்லை. காட்டில்தான் இருக்கிறது. அதை 30 அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கிறார்கள், என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ரிவால்டோ யானை காட்டில் வாழ்வதன் சாத்தியங்களை ஆராய வேண்டும் என்று கூறி, வழக்கை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications