2025-ல் காசநோய் இல்லாத சூழலை உருவாக்குவோம்... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
சென்னை: 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போலியோ இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2025-ல் காசநோய் இல்லாத சூழலை
கொண்டு வருவோம் என்றார்.
மேலும், 0.46 என்ற அளவில் உள்ள தொழுநோயை இல்லாமல் ஆக்குவோம் என்றும், 2025-ல் காசநோய் இல்லாத சூழலை கொண்டு வருவோம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் மருத்துவ சேவையில் மதுரை 2-வது தலைநகரமாக மாறும் என்றும் கூறினார்.
மேலும், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வில் இந்தியாவிலேயே தமிழகம் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
English summary
Health Minister Vijayapaskar said that no polio in Tamil Nadu for 14 years.