இதுவா, அதுவா.. இருக்கிறோமா.. இல்லையா... குழம்பி தவிக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்
தினகரனையும் கூட்டத்துக்கு கூப்பிட்டிருக்க வேண்டும் என்று ரத்தின சபாபதி கூறினார்
Recommended Video
சென்னை: அதிமுக, திமுகவை விடுங்க.. யார்பக்கம் என்றே சொல்லாமல் இன்று வரை கருதப்படும் 3 அதிருப்தி எம்எல்ஏக்களின் நிலையை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது!
தேர்தலுக்கு முன்பு வரை அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோரின் ஆதரவு கட்சிகளுக்குமே குறிப்பாக அதிமுகவுக்கு தேவையானதாக இருந்தது.
அப்போதெல்லாம் தினகரனுக்கு ஆதரவா, அதிமுகவுக்கு ஆதரவா என்பதை வெளிப்படையாக சொல்லாமல் குழப்பி அடித்து வந்தனர்.

நிலைப்பாடு
தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு அப்படியே நிலைப்பாடு உல்டா ஆனது. "நாங்கள் அதிமுகவில்தான் இருக்கிறோம். அமமுகவில் உறுப்பினராக இல்லை" என்று கூட்டாக 3 பேருமே சொன்னார்கள். படுதோல்வி காரணமாக எத்தனையோ நிர்வாகிகள் அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு ஜம்ப் ஆகி வருவதால், இவர்களும் அதிமுகவில்தான் ஐக்கியம் என்பது ஓரளவு உறுதியானது.

முதல் தைரியம்
ஆனால் விஷயம் என்னவென்றால், இவர்கள் 3 பேரையுமே அதிமுக கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது என்பதுதான். இதற்கு காரணம், ஆட்சிக்கு பாதகம் இல்லாதவரையில் 9 இடங்களில் வெற்றி பெற்று விட்டது அதிமுக. முதல் தைரியமே இதுதான்.

தலைமை அலுவலகம்
அடுத்ததாக, நேற்றுவரை அமமுக சார்பாக இருந்தவர்கள், நாளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒருஎண்ணம் அதிமுக தலைமைக்கு இருந்து கொண்டே இருந்தது. அதனால் முழுசுமாக இவர்கள் 3 பேரையுமே நம்பவில்லை. இதனிடையேதான், நேற்று அதிமுக மா.செ. கூட்டம். தலைமை அலுவலகத்துக்கு இவர்கள் வந்திருந்தனர்.

டிடிவி தினகரன்
அப்போது ரத்தினசபாபதி பேசும்போது, நாங்களும் அதிமுக தொண்டர்கள் தான். எல்லா தொண்டர்களையும் தலைமை அரவணைத்து போக வேண்டும். எனக்கும், தினகரனுக்கும் அரசியல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டார்களா என தெரியவில்லை.

நிலைப்பாடு
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், எங்களிடம் ஆதரவு கேட்டால் அப்போது முடிவு எடுப்போம். நாங்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அழைப்பு விடுக்காமல் எப்படி வர முடியும் என்று கேட்டார். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லையே.. தினகரனையும் இவர்கள் கூப்பிட்டிருக்க வேண்டும் என்று ஒரு போடு போட்டார். அப்படியானால், இவர்கள் 3 பேரின் உண்மையான நிலைப்பாடு என்ன வென்று இதுவரை மக்களுக்கு தெரியாமலேயே உள்ளது.

யார் பக்கம்?
உண்மையிலேயே இவர்கள் அதிமுக எம்எல்ஏக்களா, அமமுக எம்எல்ஏக்களா, அல்லது பல் பிடுங்கின பாம்பு போல இவர்களை அதிமுக நடத்த முயல்கிறதா என்றெல்லாம் புரியாமலேயே உள்ளது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications