2 மாதம் வாடகை வேண்டாம்.. கவலைப்படாதீர்கள்.. வீட்டு ஓனர்களின் கரிசனம்.. ஆச்சர்யமளித்த சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா காரணமாக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கூட பல இடங்களில் வீட்டு ஓனர்கள், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர்களிடம் மிகவும் கரிசனத்துடன் நடந்து உள்ளனர். 16% வீட்டு ஓனர்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் இரண்டு மாதம் வாடகை தர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுக்க கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பாகவும், வீட்டு ஓனர்கள் - வாடகைக்கு இருப்பவர்கள் தொடர்பாகவும் 99 ஏக்கர்ஸ் (99acres.com) நிறுவனம் சர்வே ஒன்று எடுத்துள்ளது.

99acres.com என்பது பிரபல ரியல் எஸ்டேட் ஆன்லைன் நிறுவனம் ஆகும். பல்வேறு வீட்டு ஓனர்கள் மற்றும் வீடுகளில் தங்கி இருக்கும் நபர்களிடம் இந்த நிறுவனம் சர்வே எடுத்துள்ளது.

மிகவும் கரிசனம்

மிகவும் கரிசனம்

இந்த நிலையில் கொரோனா காரணமாக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கூட பல இடங்களில் வீட்டு ஓனர்கள், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர்களிடம் மிகவும் கரிசனத்துடன் நடந்து உள்ளனர். தங்களை போலவே தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களிடம் வாடகை வாங்க கூடாது என்று வீட்டு ஓனர்கள் பலர் முடிவு செய்துள்ளனர். பொது மக்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று சர்வே மூலம் தெரியவந்துள்ளது..

வாடகை வேண்டாம்

வாடகை வேண்டாம்

அதன்படி 16% வீட்டு ஓனர்கள் தங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் இரண்டு மாதம் வாடகை தர வேண்டாம் என்று கூறியுள்ளனர். மேலும் 41% பேர் உங்களால் முடியும் போது வாடகை கொடுங்கள் என்று வீட்டில் இருக்கும் நபர்களிடம் கூறியுள்ளனர். 44% பேர் எந்த விதமான வாடகையையும் ஏற்றாமல் இருந்துள்ளனர். மேலும் 76% பேர் இன்னும் கூட தங்கள் வீட்டை அதை வாடகையில் விட தயாராக இருக்கிறார்கள்.

கேட்டான முடிவு

கேட்டான முடிவு

24% பேர் லாக் டவுன் முடிந்து பொருளாதாரம் சரியான பின் விலையை பார்த்துவிட்டு வாடகைக்கு விட தயாராக உள்ளனர். 54% பேர் வாடகையை குறைக்காமல் அதே வாடகைக்கு வீட்டை வாடகைக்கு விட தயாராக உள்ளனர்.11% பேர் மட்டுமே வாடகையை ஏற்ற முடிவு செய்துள்ளனர். அதேபோல் 80% பேர் தங்கள் நிலம் அல்லது வீட்டை அதே பழைய மார்க்கெட் விலையில் விற்க முடிவு செய்துள்ளனர்.

வீடு விற்பனை என்ன

வீடு விற்பனை என்ன

20% பேர் தங்கள் வீட்டை விற்கும் எண்ணத்தில் இல்லை. 45% பேர் தங்கள் வீட்டை அல்லது நிலத்தை விலை குறையாமல் விற்க உள்ளனர். 10% பேர் விலை இன்னும் ஏறும் என்று காத்து இருக்கிறார்கள். 57% இடைதேர்தரகர்கள் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி அடையும் என்கிறார்கள். 29% இடைத்தரகர்கள் தங்கள் எதிர்க்கலாம் குறித்து அச்சம் எழுப்பி உள்ளனர். 50% பேர் பெரிய அளவில் பொருளாதார சரிவு வரும், மீளுவது கடினம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+