"அடைமழை"தான் அடுத்த 2 நாட்களுக்கு.. இந்த 6 மாவட்ட மக்களும் கவனம்.. வந்தது புது அறிவிப்பு

இன்றும் நாளையும் தமிழகம் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் நாளை 15 ம் தேதியும் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. அந்த வகையில் 6 மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

 வலு குறையும்

வலு குறையும்

இதனால் தமிழகத்தில் மேலும் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதால், தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவும் இந்த மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும், இதன் காரணமாக, வங்கக் கடலில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்..

 சூறாவளி

சூறாவளி

மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, தமிழக தென் கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், கேரள, கர்நாடக அரபிக்கடல் பகுதிகளிலும், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 சின்னக்கல்லார்

சின்னக்கல்லார்

மேலும், மீனவர்கள் வரும், 14ம் தேதி வரை அதாவது இன்றைய தேதிவரை இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.. இந்நிலையில் மற்றொரு வானிலை அறிக்கை வெளியாகி இருந்தது.. அதில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 6 மாவட்டங்கள்

6 மாவட்டங்கள்

எனவே, காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் நாளை 15 ம் தேதியும் கனமழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை வரை கனமழை தொடரும். அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மலை பகுதிகளில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+