சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலத்திற்கு இடையில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களாக ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இன்னொரு பக்கம் தென்மேற்கு பருவ காற்று காரணமாக இப்போதே கேரளாவை ஒட்டி இருக்கும் தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அருகே இருக்கும் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம் 90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்

அசானி புயல்

அசானி புயல்

முன்னதாக ஆந்திரபிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்தது. இதனால் வெப்பநிலை உயரும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் காரணமாக ஈரக்காற்று காரணமாக கடந்த வாரம் 2-3 நாட்கள் மழை பெய்தது.

தற்போது ஏன் மழை

தற்போது ஏன் மழை

தற்போது மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று மழை

இன்று மழை

18.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்), கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை

நாளை

19.05.2022: நாளையும் தமிழ்நாட்டில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English summary
Weather Report: Tamil Nadu to get rain amid the summer for next 3 days. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X